Skip to main content

மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்....வருந்தும் விவசாயிகள்!!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வக்கம்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மக்காச்சோள பயிரை தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர். 
 

Golden corns are being attacked by american worms worries farmers


குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில் அதிக வருவாய் கிடைக்கும் என்பதாலும் ஒவ்வொருமுறையும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்டாலும் மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த ஆடி மாதம் மக்காச்சோளம் பயிரை இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர். அவை நன்கு வளர்ந்து கதிர்விட்டு வளர்ந்து வரும் நிலையில் தற்போது மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஆரம்பித்துள்ளது. தோட்டங்களில் மக்காச்சோள பயிரில் 10 கதிர்களில் ஒரு கதிரில் படைப்புழுக்கள் தெரிகின்றன. இதுதவிர கதிர்களை நாசம் செய்த புழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிரில் இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமார் 20ஆயிரம் முதல் 26ஆயிரம் ஹெக்டேர் அளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. அவற்றில் ஏற்பட்டு வரும் அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தால் வருடாந்திர விளைச்சலில் 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்து வருகிறது. எங்கள் பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டுள்ளன. அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலால் பயிர் வளர்ச்சிக்காக முதலீடு செய்த ரூபாயை கூட எங்களால் எடுக்க முடியாது. 


பயிர்களை காப்பாற்ற உரம் மற்றும் மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தினாலும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. வேளாண்த்துறை அதிகாரிகள் இப்பகுதியில் முகாமிட்டு ஒட்டுமொத்தமாக புழுக்களை கட்டுப்படுத்தி அழிக்க வேண்டும் என்றார். 2015ம் ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு வருடமும் நாங்கள்  அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகிறோம் என்று கூறினார்கள்.

மேலும், வேளாண்துறை அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்து முறையாக பயிர்களை பார்வையிடுவது கிடையாது. தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இப்பகுதி விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்டும், அமெரிக்கன் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்டும் நஷ்டமடைந்து வந்தாலும் இந்த வருடமாவது நாம் தப்பித்துவிடுவோம் என மக்காச்சோளம் பயிரிட்டனர். அதிலும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் தெரிய தொடங்கியவுடன் விவசாயிகள் கடும் சோகத்தில் உள்ளனர்.

வேளாண்துறை அதிகாரிகள் இனிமேலாவது விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு அதிக அளவில் வேளாண்துறை பணியாளர்களை வரவழைத்து ஒட்டுமொத்தமாக இப்பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் புழுக்களை அழிக்கும் மருந்துகளை தெளிக்காவிட்டால் ஒட்டுமொத்தமாக 500க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் வீணாகவும் வாய்ப்புள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.