Skip to main content

விமானத்தில் தங்கம் கடத்தல் - 41 சுங்க அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

Published on 11/09/2018 | Edited on 11/09/2018


திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் ஒரே இரவில் 41 பேர் அதிரடி மாற்றம். அடுத்த ஒரு நாட்களுக்குள் பணி சேர சொல்லி வாய் மொழி உத்தரவு என திருச்சி விமாநிலையம் ஏகப்பட்ட பரபரப்பாக இருக்கிறது.. காரணம் என்ன என்று விசாரித்ததில்..

திருச்சி சர்வதேச விமானநிலையத்துக்கு தினமும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதிஅரேபியா, துபாய் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றனர். உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகளில் திருச்சியை சுற்றி உள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் திருச்சி விமானநிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்து கொண்டே இருந்தது. இந்த குற்றசாட்டிற்கு பிறகு ஒரு சில பயணிகள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டும் வந்தது.

ஆனால் பயணிகள் சிலர் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் அடிப்படையில் கடந்த மாதம் 5-ந் தேதி திருச்சி விமானநிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பயணிகளின் உடைமைகள் முழுவதையும் சோதனை நடத்தினார்கள். இதில் ஒரு சில பயணிகளை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் தங்கம் மற்றும் பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்வதற்கும், தங்கம் கடத்தலுக்கும் சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த அதிரடி விசாரணையில் இதில் தொடர்புடைய சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்டேசலு, கண்காணிப்பாளர்கள் கலுகாசலமூர்த்தி, ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் அனீஸ்பாத்திமா, பிரசாந்த் கவுதம், ஊழியர் எட்வர்டு ஆகிய 6 பேரும், பயணிகள் 13 பேரும் சிக்கினர். இவர்கள் 19 பேர் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். கைதான அனைவரும் மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்கம் கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகளே உடந்தையாக இருந்தது வேலியே பயிரை மேய்ந்த கதை போல் ஆகிவிட்டது. அதிகாரிகளின் செயலால் திருச்சி விமான நிலையத்தின் பெயர் இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாட்டிலும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல பயணிகள் திருச்சி விமான நிலையம் வழியாக பயணம் செய்வதை தவிர்க்க தொடங்கினார்கள்.

சி.பி.ஐ. நடத்திய சோதனை எதிரொலியாக திருச்சி விமானநிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி திருச்சி சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்கள் 39 பேர், விமான சரக்கு முனையம் (கார்கோ) பிரிவு அதிகாரிகள் 2 பேரும் சேர்த்து மொத்தம் 41 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருச்சி தவிர வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் முகமது நவ்பால் வெளியிட்டுள்ளார். மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்டோர் அந்தந்த இடங்களில் வரும் 12-ந் தேதிக்குள் பணியில் சேருமாறு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர்களாக நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த்யாதவ், யதுவேந்தர்சிங் ஆகிய 5 பேரும், கார்கோ பிரிவில் நரேந்திரகுமார், ரவிகேஷ்குமார் கேசன் ஆகியோரும் புதிதாக பொறுப்பேற்க உள்ளனர். என்பது குறிப்பிடதக்கது.

இப்படி திருச்சி விமாநிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் ஒரே இரவில் 41 பேர் அதிரடி மாற்றம் என்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் விமானநிலைய அதிகாரிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.