விமான டிக்கெட்டில் கடத்தப்பட்ட தங்கம்! 

Gold smuggled in airline ticket!

துபாயில் இருந்து இன்று திருச்சி விமான நிலையம் வந்து சேர்ந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகிக்கும் வகையாக வந்த நபரைப் பிடித்து சோதனை செய்ததில், டீ-ஷர்ட்டுக்குள் இசை போன்ற வடிவில் இருந்த உள்பகுதியைச் சோதனை செய்தனர். இதில், அந்த உள்பகுதியில் 259.5 கிராம் தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு பையனிடம் டிக்கெட்டுகளை சோதனை செய்தனர். அதில் பேஸ்ட் வடிவில் ஒட்டப்பட்டிருந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 12.50 லட்சம் ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

airport trichy
இதையும் படியுங்கள்
Subscribe