சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 512 உயர்ந்து புதிய உச்சமாக ரூபாய் 31,168 க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூபாய் 64 உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 3,896க்கு விற்பனையாகிறது. மூன்று நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,280 அதிகரித்து புதிய உச்சத்தில் விற்கப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 1.30 உயர்ந்து ரூபாய் 52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல் கூறுகின்றன.