Skip to main content

தங்கநகை சட்டம்; ஆதரிப்போரும்.. எதிர்ப்போரும்.. 

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

Gold Law; Supporters .. Opponents ..

 

இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தங்க நகைச் சட்டத்தின்படி அனைத்து நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை கண்டிப்பாக இருக்கவேண்டும் என்றும், அதுமட்டுமல்லாமல் ஹால்மார்க் அடையாள எண் படிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்துக்கு தங்க நகை விற்பனையாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அதற்காக நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

 

எதிர்ப்பதற்கான காரணம் குறித்து கேட்டபோது, ‘அனைத்து நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டும் என்ற நடவடிக்கையை வரவேற்கிறோம். எனினும், ஹால்மார்க் அடையாள எண் பதிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. ஒவ்வொரு நகைக்கும் ஹால்மார்க் அடையாள எண் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டுவிழா என பல நிகழ்வுகளுக்கு மக்கள் நகை வாங்கும் பொழுது அந்த எண்களை கொடுப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. அதோடு ஒவ்வொரு நகையிலும் அடையாள எண் போடவும் முடியாது. தாலி, மூக்குத்தி போன்றவற்றில் அடையாள எண்ணை பொரிக்கும்போது நகை சேதமடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனாலயே இச்சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்’ என தெரிவிக்கின்றனர்.

 

இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களோ, ‘இந்தியாவில் 90 சதவித தங்க விற்பனை பில் இல்லாமல் நடக்கிறது. இதனால் நாட்டுக்கு பலலட்சம் கோடி வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதோடு தங்கம் கடத்திவரப்பட்டு இந்தியாவில் நகைகளாக செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் விற்பனையாகும் தங்கநகைக்கும், கொள்முதலுக்கும் இடையே பல்லாயிரம் டன் வித்தியாசம் உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. இதனை முறைப்படுத்தவே இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது’ என்கிறார்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.