கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சாலையோரத்தில்,தங்கக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சுமார் 20க்கும் மேற்பட்டோர் சாலை ஓரத்தில் இருந்து தங்க காசுகளை எடுத்துள்ளனர்.
சிறிய வடிவிலான தங்கக் காசுகள் கண்டெடுக்கப்பட்டநிலையில், அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களில் இந்தத் தகவல் பரவியது.இதனால்,பொதுமக்கள் அதிகமானோர் சாலையோரத்தில்குவிந்துதங்க காசுகளைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் அறிந்து இடத்திற்கு வந்த காவல்துறையினர்திரண்டுள்ள பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் தங்கக் காசு கிடப்பதாக வெளியான தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.