Skip to main content

தங்கக் காசு பரிசு! துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொடங்கிவைத்த திட்டம்...

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

தேனி புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறிகள் மார்க்கெட் சந்தையில், இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரோனா ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வீடு தேடி வரும் மளிகை பொருட்களை வாங்குபவர்களில், குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு தங்கக் காசு பரிசுத் திட்டத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்  தொடங்கிவைத்தார்.

 

 Gold coin gift for home buying groceries! Deputy Chief Minister OPS Started !!


கரோனா  வைரஸ் நோயை முற்றிலும் தடுக்கும் விதமாக சமூக தனிமைப்படுத்தலை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில், தேனி மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஊரடங்கு உத்தரவு கடந்த 24-ஆம் தேதியன்று நடைமுறைப்படுத்தப்பட்டு தொடர்ந்து 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே இந்த நோய் தாக்குதலை தவிர்க்க இயலும். மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் பொருட்டு வெளியில் வருவதால் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்வதும் அரசின் கடமையாகும். அதனை செயல்படுத்தும் விதமாக, பல்வேறு பகுதிகளில் அவரவர் வீடு தேடி தரமான பொருட்களை, நியாயமான விலையில் கொண்டு சேர்க்க வசதியாக ஏழு சிறிய சரக்கு வாகனங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

 

 Gold coin gift for home buying groceries! Deputy Chief Minister OPS Started !!

 

அதன்படி பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான மளிகை பொருட்களை நியாயமான விலையில், தங்களின் வீடுதேடி வழங்கும் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு (பொன்னி அரிசி 10 கிலோ, இட்லி அரிசி 5 கிலோ, துவரம் பருப்பு ஒரு கிலோ, உளுந்தம் பருப்பு ஒரு கிலோ, பாசிப் பருப்பு 200 கிராம், புளி கால் கிலோ, கோதுமை மாவு ஒரு கிலோ, மஞ்சள் தூள் 100 கிராம், கல்லுப்பு, தூள் உப்பு ,சர்க்கரை ஒரு கிலோ, கடலை பருப்பு 200 கிராம், பட்டாணி 200 கிராம், சுண்டல் 200 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 100 கிராம், கடுகு 100 கிராம், மிளகாய் வத்தல் 250 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், பெருங்காயம் 50 கிராம், மல்லித் தூள் 100 கிராம், சாம்பார் பொடி 100 கிராம், வெந்தயம் 100 கிராம், சோம்பு 50 கிராம், தேங்காய் எண்ணெய் 100 மில்லி, நல்லெண்ணெய் 500 மில்லி, சன்பிளவர் எண்ணெய் ஒரு லிட்டர் போன்ற 27 மளிகை பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பு) மற்றும் தேவையான பொருட்கள் குறிப்பிட்ட அளவில், தோராயமாக இரண்டாயிரம் ரூபாய் மதிப்பில் வழங்கப்படுகிறது.

இந்த மளிகை பொருள் தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மைய வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு வாங்கிக் கொள்ளலாம்.

 

 Gold coin gift for home buying groceries! Deputy Chief Minister OPS Started !!


இந்தத் தொகுப்பு திட்டத்தில் கூடுதலாக 2000 பொருட்கள் வாங்கும் நபர்களுக்கும், வீடு தேடி வரும் பொருட்களை வாங்குபவர்களுக்கும் பரிசு கூப்பன் வழங்கப்படும். அதைபூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இம்மாத இறுதியில் குலுக்கல் நடைபெற்று தேனி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தலா  ஒரு பவுன், அரை பவுன் மற்றும் கால் பவுன் தங்க காசு பரிசாக வழங்கப்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இப்படி வீடு தேடி வரும் மளிகைபொருள் குலுக்கல் திட்டத்தை தொடங்கி வைத்தபின் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தேனி மற்றும் போடியில் உள்ள அம்மா உணவகங்களை ஆய்வு செய்தார். அப்பொழுது அம்மா உணவகத்தில் மக்களோடு மக்களாக சேர்ந்து ஓ.பி.எஸ். காலை டிபன் சாப்பிட்டார். அப்போது அங்கு உணவு அருந்த வந்த தாய்மார்களிடம் அம்மா உணவகம் குறித்து கேட்டறிந்தார்.  உடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் குமாரும் அம்மா உணவகத்தில் ஓ.பி.எஸ்.ஸுடன் இணைந்து காலை டிபன் சாப்பிட்டார்.

உடன் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உள்பட சில அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.