Skip to main content

செய்வினை எடுப்பதாக தங்கச் சங்கிலி அபேஸ்; முதியவரை தேடும் போலீசார்

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
The gold chain is taken as an black magic; Police looking for old man

'உங்க வீட்டுக்கு உங்க உறவினர்களே செய்வினை வச்சுட்டாங்க. உடனே எடுக்கலனா துர் சம்பவங்கள் நடக்கும், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படும்' என்று வீட்டு வாசலில் வெள்ளை வேட்டி சட்டையோடு நின்று சொன்ன 70 வயது முதியவர் அந்த வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடும்  சம்பவங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கத் தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகம் மேற்பனைக்காடு பேருந்து நிறுத்தத்தில் டவுன் பஸ்ஸில் இறங்கி மேற்கு நோக்கி நடக்க 100 மீ தூரத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் நின்று 'இந்த வீட்ல செய்வினை இருக்கு. இந்த வீட்டு சொந்தக்காரங்களே செய்வினை வச்சு உங்களை கொல்லப் போறாங்க உடனே எடுக்கனும்' என்று வெள்ளை வேட்டி சட்டையில் வந்த 70 வயது முதியவர் ஒருவர் சொல்லியுள்ளார்.

பயத்தின் உச்சத்திற்கே போன அந்த வீட்டுக்காரர் முதியவரிடம் இறங்கி வந்து பேச, இப்பவே பூஜையை ஆரம்பிக்கனும். 3 நாள் பூஜை செஞ்சு உனக்கு வச்ச செய்வினையை எடுக்கனும். அப்பதான் இந்த குடும்பத்துக்கு நல்லது நடக்கும் என்று முதியவர் சொல்ல அன்றே தொடங்கியது பூஜை. இந்த பூஜை முடிஞ்சு செய்வினை எடுக்கும் வரை யார்கிட்டயும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வேறு வாங்கிக் கொண்டார்.

3 வது நாள் பூஜை நடக்கும் போது தண்ணீரில் விபூதி என எதையோ போட தண்ணீர் சிவப்பானது. செய்வினை அதிகமா இருக்கு அதுக்கு வேற பரிகாரம் செஞ்சுதான் எடுக்கனும் வீட்டில்  இருந்து 7 புடவைகளை எடுத்து நான் சொல்லச் சொல்ல ஒவ்வொன்னா மடித்து அடுக்கி வைங்க என்று சொல்லிக் கொண்டே போனவர், ஒரு கட்டத்தில் தங்கச் சங்கிலியை அந்த புடவைக்குள் வச்சு கட்டுங்க என்று சொல்லியுள்ளார். சொன்னதை அப்படியே செய்துள்ளனர். 3 நாளைக்கு இந்த புடவை கட்டை அவிழ்க்க கூடாது.

இப்ப இந்த துண்டை இடுப்பில் கட்டுங்க என்று ஒரு துண்டு கொடுக்க, அந்த துண்டில் நெருப்பு தீ எரிய அய்யய்யோ செய்வினையின் வேகம் இன்னும் அதிகமாகுது இந்த துண்டை அவிழ்த்து விடாதீங்க இப்பவே கீரமங்கலம் சிவன் கோவில் போய் சிவனை வழிபட்டு ஒரு பூஜை பண்ணனும் அப்பதான் எல்லாம் சரியாகும். நீங்க சிவன் கோயில் போங்க நான் வேற ஒரு இடத்துக்கு போயிட்டு அங்கே வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு சென்ற முதியவர் பல நாட்களாக காணவில்லை.

3 நாட்கள் கழித்து புடவை கட்டை அவிழ்த்து பார்க்க உள்ளே வைத்த 3 பவுன் தங்கச் சங்கிலியையும் காணவில்லை. மாறாக ஒரு கல் மட்டும் இருந்தது. அதன் பிறகே தான் முதியவரால் ஏமாற்றப்பட்டது தெரிய வந்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பார்க்க முதியவரின் படம் பதிவாகி உள்ளது. இதே ஊரில் புதுக்குடியிருப்பு பகுதிக்கும் அந்த முதியவர் சென்றுள்ளார். கடந்த மாதம் இதே முதியவர் அன்னவாசல் பகுதியில் ஒரு குடும்பத்தை ஏமாற்றி நகைகளை திருடிக் கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது.

எல்லா ஊரிலும் சிசிடிவி கேமராவில் அந்த முதியவரின் உருவம் பதிவாகி இருந்தாலும் கூட இதுவரை அவரை அடையாளம் கண்டு கைது செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் புதுக்கோட்டை போலீசார். எவ்வளவோ அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும் கூட இன்னும் பில்லி, சூனியம், செய்வினை என்று மக்கள் ஏமாறுவதும் குறையவில்லை. இதனை முதியவர்கள் கூட பயன்படுத்தி ஆட்டையை போடுகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது.