Skip to main content

பினராயி விஜயனின் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரம்!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

Gold and drug issue that has caused problems for Pinarayi Vijayan

 

 

இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆளும் ஒரே மாநிலம் கேரளா. மாநில தேர்தலை சந்திக்க இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா? என்ற கேள்வி கம்யூனிஸ்ட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. கடந்த முறை ஆட்சி செய்த காங்கிரசுக்கு கடைசி நேரத்தில் சோலார் பேனல் மோசடி சரிதா நாயரால் காங்கிரஸ், ஆட்சியை இழந்தது. அதேபோல் தற்போது கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு கடைசி நேரத்தில் தங்க கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் கொடியேறி பாலகிருஷ்ணனின் இளைய மகன் பினீஷ் கொடியேறி போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடா்பு இருப்பதாக அமலாக்க துறையால் கைது செய்யபட்டுள்ளார். 

 

ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டிருந்த தங்க கடத்தலில் முக்கிய புள்ளியாக இருந்த முதல்வா் பினராயி விஜயனின் முதன்மை செயலாளா் சிவசங்கரன் அமலாக்க துறையால் கைது செய்யபட்டிருக்கும் நிலையில் எதிர்கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.க.வும் தங்கக் கடத்தலில் முதல் குற்றவாளி பினராயி விஜயன்தான் அவரையும் அமலாக்க துறை விசாரிக்க வேண்டும் என்று கேரளா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும் பினராயி விஜயனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். காங்கிரஸ் எதிர்கட்சி தலைவா் ரமேஷ் சென்னிதலா, பினராயி விஜயன் முதல்வா் பதவியை வேறொருவரிடம் கொடுத்துவிட்டு  ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை முன்வைத்துதான் காங்கிரஸ் போராட்டத்தை தொடா்கிறது என்றிருக்கிறார்.

 

பா.ஜ.க. மாநில தலைவா் சுரேந்திரன், முதல்வா் அலுவலகத்தை சோ்ந்த மேலும் இரண்டு அதிகாரிகள் இதில் தொடா்பு இருக்கிறது. இதனால் இதில் பினராயி விஜயனுக்கு தொடா்பு இல்லாமல் இல்லை எனக் கூறி பினராயி விஜயனுக்கு நெருக்கடியைக் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறி, போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் முகம்மது அனூப்க்கு லட்ச கணக்கில் பணம் கொடுத்திருப்பதும் அந்த கும்பலோடு நெருங்கிய தொடா்பு இருக்கிறது என்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில் பினீஷ் கொடியேறியை அமலாக்க பிரிவு கைது செய்துள்ளது. இது கேரளாவில் ஏற்கனவே பற்றி எரியும் தங்கக் கடத்தல் நெருப்போடு இதுவும் கலந்து நெருப்பின் வேகத்தை அதிகரித்துள்ளது.

 

ஏற்கனவே கொடியேறி பாலகிருஷ்ணனின் மூத்த மகன் பினோய் கொடியேறி துபாயில் பணம் மோசடி செய்து அதில் கொடியேறி பாலகிருஷ்ணன் நேரடியாக தலையிட்டு பிரச்சனையை ஏற்படுத்திய சம்பவம் எதிர்க்கட்சிகள் பினராயி விஜயன் மீதும் குற்றச்சாட்டுகளை கூறியது. அதுவும் பினராயிக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில்தான் தற்போது தங்கக் கடத்தல் விவகாரமும் போதை பொருள் கடத்தல் விவகாரமும் பினராயி விஜயனுக்கும் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஏற்கனவே சி.பி.ஐ. பதிவு செய்த  பினராயி விஜயன் மீதான லாவ்லின் ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தோ்தலில் எதிர்கட்சிகள் இதையெல்லாம் முன்னிலை நிறுத்த போவது உறுதி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.