Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை! தாயார் தொடர்ந்த வழக்கில் ஆக. 23- ல் விசாரணை! 

Published on 16/08/2022 | Edited on 17/08/2022

 

gokul raj incident case madurai high court bench order


 
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் தண்டனை வழங்கக் கோரி, அவருடைய தாயார் சித்ரா தொடர்ந்த மனுவின் மீதான விசாரணையை ஆக. 23- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.   

 

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பி.இ., பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், தன்னுடன் படித்து வந்த, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்து வந்தார். அவர், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.  

 

இந்நிலையில் கோகுல்ராஜ், கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூன் 23- ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, முண்டம் வேறாக கொல்லப்பட்டுக் கிடந்தார்.  

 

விசாரணையில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை 
நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் சேர்ந்து கோகுல்ராஜை கொலை செய்து, தண்டவாளத்தில் உடலை வீசி எறிந்தது தெரிய வந்தது.  

gokul raj incident case madurai high court bench order

இந்த வழக்கின் விசாரணை ஆரம்பத்தில் நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு 08.05.2019ம் தேதி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கோகுல்ராஜ் தரப்பில் வழக்கறிஞர் பவானி பா.மோகனும், யுவராஜ் தரப்பில் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூவும் ஆஜராகி வாதாடினர்.

 

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த மார்ச் 8- ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் குற்றவாளியான யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  இரண்டாவது குற்றவாளியான அருண், மற்றும் குமார் என்கிற சிவகுமார், சதீஸ்குமார், ரகு, ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு அளித்தது. அதாவது மொத்தம் பத்து பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. 

 

இந்த தண்டனையை எதிர்த்தும், தண்டனையை நிறுத்தி வைத்து தங்களுக்கு பிணை வழங்கக் கோரியும், யுவராஜ் உள்ளிட்ட பத்து பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.  

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் ஏற்கனவே, இவர்களுடைய பிணை மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.  
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Holiday notification for Chennai High Court

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் எம்.ஜோதிராமன் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட விளவங்கோடு தொகுதியின் இடைத்தேர்தல் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு அமர்வுகளுக்கும் விடுமுறை நாள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஜெ.பி. நட்டா வாகன பேரணி விவகாரம்; நீதிபதி அதிரடி உத்தரவு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
JP Natta vehicle rally issue Judge orders action

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (07.07.2024) மாலை ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி முரளிசங்கர் விசாரித்தார். அப்போது நீதிபதி, “திருச்சி கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வரை ஜெ.பி.நட்டா ரோடு ஷோவை நடத்திக்கொள்ளலாம். மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை 1.5 கி.மீ. வரை ரோடு ஷோ நடத்திக்கொள்ளலாம்” என உத்தரவிட்டார்.

மேலும் திருச்சியில் ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணியை மாற்றுப்பாதையில் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. முன்னதாக அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாகவும், கரூரிலும் பாஜக சார்பில் நடைபெற்ற  தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களில் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.