Skip to main content

காவிரியில் மீனவர்கள் வலையில் சிக்கிய சாமி சிலைகள்!!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

சாமி சிலைகள் கடத்தல் தற்போது தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இந்து அறநிலைதுறை அதிகாரிகள் தான் பெரிய அதிர்ச்சியில் முழ்கியுள்ளனர். இதன் விசாரணை அதிகாரியான பொன்மாணிக்கவேல் பணியிலிருந்து மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு முயற்சி செய்த நிலையில் உச்சநீதிமன்றம் பொன்மாணிக்கவேல் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரே கடைசி வரை இந்த வழக்கை விசாரிக்கலாம் என்று நீதிமன்ற அறிவிப்புக்கு பிறகு இன்னும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் திருச்சியில் மீனவர்கள் வலையில் சிலை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

god statues caught in fishermen net!!

 

மேட்டூர் அணையில் நீர் வரத்து தற்போது குறைந்துள்ளது. இதனால், திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வலையில் கனமான ஏதோ ஒன்று சிக்கியது. இதனால் மீனவர்கள் வேகமாக வலையை இழுத்து பார்த்தனர். அப்போது வலையில் உலோகத்திலான பிள்ளையார் மற்றும் நடராஜர் சிலைகள் சிக்கியது தெரிய வந்தது.

 

இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் வருவாய் தாசில்தார் ராஜேஷ்கண்ணா, விஏஓ முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அங்கு வந்த சிலைகளை மீட்டு எடுத்துச் சென்றனர். சிலைகளை யாராவது திருடிக் கொண்டு வந்து ஆற்றில் வீசியிருக்கலாம் என்றும், சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

பேருந்து நிலையத்தில் உள்ள சிலைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
court order to remove idols from bus stand

பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக்கோரி தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி  ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜெயலலிதாவின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று (13.03.2024) விசாரணைககு வந்தது.  அப்போது, “வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.