Advertisment

பொங்கல் பண்டிகைக்காக ரூ.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்..!!!!

வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்காக எட்டையபுரம் ஆட்டு சந்தையில் குட்டி ஆடு முதல் கறிக்கான ஆடுகள் வரை சுமார் ரூ.ஐந்து கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Advertisment

 Goats sales for Rs 5 crore for Pongal Festival .. !!!!

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பிரசித்திப் பெற்றது தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் ஆட்டு சந்தை.

Advertisment

பிரதி சனிக்கிழமைதோறும் நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் அதிகாலை ஐந்து மணிக்கே விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் கூடி சந்தை விற்பனையில் களைக்கட்டும். பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இச்சந்தையில் ஆட்டுக்குட்டி முதல் கறிக்கான ஆடுகள் விற்பனையாகும். வழக்கமாக வாரந்தோறும் ரூ.2 கோடி அளவிற்கு விற்பனையாகும் ஆடுகள் பண்டிகை காலங்களில் இரு மடங்காக விற்பனையாவது வழக்கம்.

 Goats sales for Rs 5 crore for Pongal Festival .. !!!!

இம்முறை வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்காக சுமார் ரூ.5 கோடிக்கும் அதிகமான அளவில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆடுகளை வளர்த்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை எதிர் நோக்கியுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

goat sales tutucorin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe