Skip to main content

ஆடு களவாணிகள்... அமர்க்களப்படும் நள்ளிரவு கறிவிருந்து

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

நெல்லை மாவட்டத்தின் நாங்குனேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடு புகுந்து ஆடுகளைத் திருடிக் கொண்டு சென்று வயல் வெளிகளில் கறிவிருந்து நடத்துவதாக அரசல் புரசலாக தகவல் கிளம்பின. ஆனால் அவைகள் கண்டு கொள்ளப்படவில்லை.

 

goat

 

நாங்குனேரி கிராமப் பகுதிகளின் ஆடுகளைக் குறிவைக்கும் கும்பல் ஒன்று பகலில் வீடுகளை நோட்டமிடுகின்றனர். இரவு நேரத்தில் அவைகளைத் திருடிக் கொண்டு சென்று, ஒதுக்குப்புற வயல் காடுகள், பம்புசெட்டுகள், பகுதிகளில் வெட்டிக் கிடாய் விருந்து படைக்கின்றனர். மது வகைகளை அருந்தி விட்டு ஆட்டம் பாட்டத்தோடு சமைக்கப்பட்டத் திருட்டு ஆடுகளின் கறியை வருவல்களை ஒரு கை பார்க்கின்றனர். இந்த சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியதால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்கிறார்கள் ஆடு வளர்ப்போர் சங்கத்தினர்.
 

இதனிடையே நாங்குனேரியை ஒட்டிய பட்டப்பிள்ளைப் புதூரைச் சேர்ந்த வானமாமலையின் வீட்டில் கட்டப்பட்டிருந்த  மூன்று ஆடுகளை இரவோடிரவாக மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் அவைகளின் மதிப்பு சுமார் 45 ஆயிரம் ரூபாய். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆடு திருடர்களைத் தேடி வருகின்றனர்.
 

இரவுநேர கிடாய் விருந்தை தடுக்க ஆடுகளைக் காப்பாற்ற இரவு நேரச் சோதனை கடுமையாக்கப்பட வேண்டும்  என்கிறார்கள் நாங்குனேரி ஆடுகள் வளர்ப்பு சங்கத்தினர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடிய இருவர் கைது

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

 Two arrested for stealing a goat on a two-wheeler

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மாலை வேளையில் வந்த இருவர் ஆட்டை திருடிச் சென்றதாக புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மாட்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன். இவர் அவருடைய தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அத்தனூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஆட்டை திருடியது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வெண்ணந்தூர் காவல் நிலைய போலீசார் சர்மா, லோகேஷ் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Next Story

குடும்பத்துடன் காரில் வந்து ஆடுகள் கடத்தல்; போலீசார் விசாரணை

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

Arriving in a car with family and smuggling goats; Police investigation

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் சாலைகளில் உணவு தேடி அலைவதும், மாலை வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றித் திறந்து கொண்டிருப்பதை பார்த்த காரில் குடும்பத்துடன் வந்த மர்ம நபர்கள் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பிப்பது போல், ஆட்டுக்கு பிஸ்கட் கொடுத்து காரில் தூக்கி போட்டுள்ளார். இதேபோல் ஒன்றன்பின் ஒன்று என 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக காரில் சிலர் ஆடுகளை திருடுவதைக் கண்டு தன்னுடைய செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானதால் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.