புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருடர்கள் பிடிபடாததால் திருட்டுகள் மேலும் மேலும் அதிகரித்துள்ளது. வழிப்பறி, பூட்டு உடைத்து திருட்டு, கத்தியைக் காட்டி திருட்டு, ஆடுகள் திருட்டு,பைக்குகள்திருட்டு என்று குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் வடகாடு பரமநகர்பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் வீட்டில் வளர்த்து வந்தவெள்ளாட்டுக்கிடாய் ஒன்றை இன்று (09.07.2025 - புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு அந்த வழியாக ஒருபைக்கில்வந்த இருவர்ஆட்டுக்கிடாயைத்தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர். இந்த திருட்டு காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புகேமராக்களில்பதிவாகி உள்ளது. 
ஆடு திருடு போய் சிறிது நேரத்திலேயே ஆட்டை காணவில்லை என்றதால் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களைஆய்வு செய்து ஆட்டை இருவர் திருடிச் செல்லும் பதிவுகளோடுவடகாடுகாவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கண்காணிப்புகேமராபதிவுகளை வைத்து ஆடு திருடர்கள் யார் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளதாகக்கூறப்படுகிறது. விரைவில் ஆடு திருடர்கள் சிக்கலாம் என்று கூறும்வடகாடுவிவசாயிகள் கடந்த ஒரு வருடத்தில்வடகாட்டில்மட்டும்10க்கும்மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவும் இல்லை, ஆடுகள் மீட்கப்படவும் இல்லை. 
இப்போது பட்டப்பகலில் ஆடு திருடியவர்களின் முகங்கள், பைக் கண்காணிப்புகேமராவில்சிக்கியுள்ளதால் இந்த காட்சிகளின் அடிப்படையில்போலிசாரிடம்சிக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இவர்களைப்பிடித்தால் ஏற்கனவே எங்கள் ஊரில் திருடிய ஆடுகள் பற்றியும்தெரியவரும் என்கின்றனர். இதேபோலக்கடந்த வாரம்கீரமங்கலத்தில்இரு இளைஞர்கள் ஒருபைக்திருடிச் செல்லும்வீடியோகாட்சிகள் பதிவாகி இருந்ததைகீரமங்கலம்போலீசார்எடுத்துச் சென்றனர். ஆனால் இதுவரைதிருடர்களைப்பிடிக்கவில்லை என்கின்றனர் வேதனையுடன். அதே சமயம்போலீசார்பற்றாக்குறையால் இது போன்ற சம்பவங்களில்விசாரணைசெய்யும்போலீசாருக்குதிருவிழா,வி.ஐ.பி.கள்வருகைக்குப்பாதுகாப்புகளுக்கு அனுப்புவதால் திருட்டுச் சம்பவங்களில் கண்காணிப்புகேமராபதிவுகள் இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது.