Skip to main content

கூகுள் மேப் வைத்து ஆடுகள் திருட்டு... பொதுமக்களிடம் சிக்கிய கும்பல்!

Published on 19/09/2021 | Edited on 19/09/2021

 

Goat theft with Google Map ... Gang trapped in public!

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வீடுகளில் கட்டியிருக்கும் ஆடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், புள்ளாண்விடுதி, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் சில மாதங்களில் பல ஆடுகள் திருடுபோய் உள்ளது. இதேபோல தான் தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில் சொர்ணக்காடு, மணக்காடு, சித்தாதிக்காடு உள்பட பல கிராமங்களிலும் தொடர் ஆடு திருட்டுகள் நடந்து வருகிறது. சிலர் காவல்நிலையங்களில் புகார் கொடுத்தாலும் பலர் புகார் கொடுக்கவில்லை.

 

இந்நிலையில் கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இரண்டு ஆடுகளை விற்க வந்த தஞ்சை மாவட்டம் சொர்ணக்காடு கிராமத்தைச் சேர்ந்த புதுக்காளியம்மன்கோயில் தெரு, கந்தசாமி என்பவரது மகன் வல்லரசு (27) மற்றும் கொலக்குடி மாந்தோப்பு, மாணிக்கம் என்பவரது மகன் ராமநாதன் (23) ஆகிய இரு ஆடு திருடர்களையும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், மணக்காட்டில் திருடிய 2 ஆடுகளையும் பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் எங்களுக்கெல்லாம் தலைவர் ஆடு கிடை போடும் ஒருவர் தான் என்பதையும் கூறியுள்ளனர். 

 

Goat theft with Google Map ... Gang trapped in public!

 

அதேபோல இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிக்காடு கிராமத்தில் ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் ஏற்றும்போது ஆடு உதறியதால் தவறி விழுந்த இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்ற இருவர் தப்பிச் சென்றுவிட்டனர். ஆடு திருடர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களிடம் விசாரித்தபோது,  இதேபகுதியில் கிடை போட்டுள்ள ஆடுகள் வளர்ப்பவரிடம் வேலை செய்கிறோம் என்றும் எங்களைப் போல புளிச்சங்காடு கைகாட்டியில் இருவர் ஆடு திருடச் செல்வோம், ஆடுகளை திருடிக் கொண்டு செல்ல கூகுள் மேப் பார்த்துக்கொள்வோம் என்றும் கூறியுள்ளனர். 

 

பிடிபட்டவர்களில் ஒருவன் பண்ருட்டி சண்முகசுந்தரம், மற்றொருவன் கடலூர் ரஞ்சித் என்றும் பெயர்களை கூறியுள்ளனர். ஒருவன் தனது அப்பா பிரமலமான அரசியல்வாதி வீட்டில் வேலை செய்வதாகவும் கூறியுள்ளான். இவர்களை நன்கு கவனித்து விசாரித்த பொதுமக்கள், பேராவூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் காத்திருந்த பிறகு காவல் நிலையத்திற்கு டிஎஸ்பி வருகிறார் திருடர்களை அழைத்துச் சென்று பிறகு அழைத்து வாருங்கள் என்று ஒரு பொறுப்பான காவல் அதிகாரிகள் அனுப்பியதால் எங்கே அழைத்துச் சென்று பாதுகாப்பது என்று தெரியாமல் ஆடு திருடர்களை மதியம் வரை ஒரு டீ க்கடையில் அமர வைத்து பொதுமக்களே. பாதுகாத்துள்ளனர்.

 

மதியத்திற்கு பிறகு பல தரப்பிலிருந்து அழுத்தம் கிடைத்த பிறகே பேராவூரணி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆடு திருடர்கள் பேரவூரணியில் பிடிபட்ட தகவல் அறிந்தவர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வடகாடு, மாங்காடு, புள்ளாண்விடுதி பகுதியில் ஆடுகளை பறிகொடுத்தவர்கள் வேகமாக பேராவூரணி செல்லுங்கள் என்று பதிவிட்ட நிலையில் ஏராளமானவர்கள் சென்றுள்ளனர். சிக்கியிருக்கும் ஆடு திருடர்களை சரியாக விசாரித்தால் எங்கெல்லாம் திருடினார்கள், யாரிடம் விற்றார்கள், இவர்களின் நெட்வொர்க் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு மொத்தமாக அனைவரையும் பிடிக்கலாம் என்கின்றனர் ஆடுகளை பறி கொடுத்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.