வாங்கிய கடனுக்கு ஒன்பது ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் கொத்தடிமை... 5 சிறுவர்கள் மீட்பு!

நேற்று திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சாருஸ்ரீ ஐஏஎஸ், ஐந்து கொத்தடிமை குழந்தை தொழிலார்களை மீட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Goat shepherd for nine years Slave for loan purchased ... 5 boys rescue!

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில் ஆடு மேய்ப்பு பராமரிப்பு தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து கொத்தடிமை குழந்தை தொழிலார்கள்மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாங்கிய கடனுக்காக கொத்தடிமை குழந்தை தொழிலாளர்களாக ஐந்து முதல் ஒன்பது வருடங்களாக வேலை செய்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் பனிரெண்டு முதல் பதினாறு வயதிக்குட்பட்டவர்கள். தேசிய ஆதிவாசி தோழமை கழகம் கொடுத்த தகவலின் பேரில் அரசு நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்டுள்ளது.விசாரணை மற்றும் மீட்கப்பட்டவர்களுக்கு விடுதலைச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படயிருக்கிறது.

Rescue slave worker Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe