Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அரசாணை வெளியீடு! 

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

GO For Chidambaram Natarajar Temple

 

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது பொதுமக்கள், பக்தர்கள் ஏறி வழிபட சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்த நிலையில் நடராஜர் கோவில் கனக சபையில் ஏறி வழிபட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் சென்றார். இதற்கு தீட்சிதர்கள் அவரை வழிபட விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர். 

 

இந்த காணொளி அனைத்து பகுதி மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீட்சிதர்களின் செயல்பாட்டை கண்டித்து மக்கள் அதிகாரம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம், தமிழ் தேசிய பேரியக்கம், சிவனடியார்கள்,  பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதிகாலம் முதல் கனகசபையில் ஏறி வழிபட்டது போல் அனுமதிக்க வேண்டும் என கோவில் வாயிலில் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். 


இந்த நிலையில் இன்று(மே-19) தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது.  இதற்கு பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


இந்த நிலையில், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி அரசாணை குறித்து விபரம் அளிக்க சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தீட்சிதர்கள் அவர்களின் கூட்டத்தில் விவாதித்து வருகிறார்கள். 


காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் நடராஜர் கோவில் குறித்து வழக்கு தொடுத்தவருமான ஜெமினி ராதா கூறுகையில், “தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தில் முதல்வர் பொற்கால ஆட்சி நடத்தி வரும் சூழலில் அனைத்து மக்களும் கனகசபையில் ஏறி வழிபடலாம் என அரசாணை வெளியிட்டது அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.

Next Story

திருமாவளவனை கிராமத்திற்கு அழைப்பதில் போட்டி; வி.சி.கவினர் இடையே மோதல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Clash between VCk over inviting Thirumavalavan to village

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வி.சி.க., வேட்பாளரும் அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன், அமைச்சர் பன்னீர்செல்லம் தலைமையில் புவனகிரி ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். மருதுாரில் ஓட்டு சேகரித்தவர், நிகழ்ச்சியில் திட்டமிட்டவாறு அருகில் உள்ள பகுதிகளுக்கு ஓட்டு சேகரிக்க சென்றார். இதில் வி.சி.க., இளைஞர்கள் கிருஷ்ணாபுரம், நத்தமேடு, ஜெயங்கொண்டம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு தனித்தனியாக அழைத்தனர். அதற்கு திருமாவளவன் நேரம் குறைவாக உள்ளது. பிறகு வந்து சந்திக்கிறேன், திட்டமிட்டவாறு சில கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றார்.

இதில் சிலர் வேறு ஊருக்கு செல்லட்டும் வழி விடுங்கள்.. என்றனர். இதனால் இளைஞர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கெண்டனர். மேலும் எங்கள் ஊருக்கு வரவேண்டும் என கோரி மருதுார் – ஜெயங்கொண்டம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆனதால் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

போலீசார் இல்லாததால் மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் திருமாவளவன் வேறு ஊருக்கு ஓட்டு கேட்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின் இரவு 9.00 மணிக்கு தகவலறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக எச்சரித்தும் கண்டு கொள்ளாமல் போலீசாரிடம் முரண்பாடாகப் பேசினர். இதனால் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் குறைந்த அளவில் இருந்த போராட்டக்காரர்களை போலீசார்  விரட்டியடித்து  கலைத்தனர்,  இதனால் புவனகிரிக்கு வந்த திருமாவளவன், இரவு காலம் கடந்து வந்ததால் ஓட்டு கேட்காமல் கையை அசைத்தவாறு திரும்பிச்சென்றார்.