Skip to main content

மயிலாடுதுறை தொகுதி ஜி.கே. வாசனுக்கு என்றால், சிட்டிங் அதிமுக பாரதிமோகனுக்கு?

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

 

ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணைந்து, மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடப்போவதாக அவரது ஆதரவாளர்கள் குதூகளித்து வருகின்றனர்.

 

v

 

நாடாளுமன்றத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைப்பது, தொகுதிகள் பங்கீடு என ஜரூராக இருந்துவருகின்றனர். தேர்தலுக்கான தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களும் பெற்றுவருகின்றனர். 

 

 டெல்டா மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில்  அதிமுகவிடமும், திமுகவிடமும் மாறி மாறி கூட்டணி பேசி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடைசி நேரம் வரை இரு அணிகளிலும் இடம்கிடைக்காமல் போக இறுதியில் மக்கள் நலக் கூட்டமைப்பில் சேர்ந்தார் வாசன். தற்போது  மக்கள் நல கூட்டு இயக்கத்தில் உள்ள இடது சாரிகள், மதிமுக, விசிக போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.  அதேபோல் தேமுதிகவையும் அதிமுக தங்களது கூட்டணியில் எழுக பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாமகவும் அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது.

 

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கூட்டணிப்பேசியது போலவே, தமாக சார்பில் திமுகவிடமும், அதிமுகவிடமும் பேச்சு நடத்திவருகிறது.

 

இது குறித்து கும்பகோணத்தை சேர்ந்தவரும் வாசன் குடும்பத்தோடு நெருக்கமான ஒருவரிடம் விசாரித்தோம், " தலைவர் வாசனுக்கு திமுகவில் சேர வேண்டும், அந்த கூட்டணியில் இடம் பிடிக்க வேண்டும் , என்பதுதான் இன்று வரை விருப்பம். அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடக்கிறது. அதேபோல் வாசனுக்கு உரிய மரியாதையை அளிக்க ஸ்டாலினும்  முன்வந்திருந்தார். ஆனால் ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம்பிடித்து காத்திருக்கும் காங்கிரஸ்காரர்கள் வாசனை இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

 

கடந்த சட்டமன்ற தேர்தல் போல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக  அதிமுகவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அவர்களிடம் இரண்டு மக்களவையும் ஒரு மாநிலங்களவையும் கேட்டுள்ளோம்.  அவர்களும் எங்களோட நிலையை சாதகமாக்கிக்கொண்டு நம்ம அணியில் கூட்டணிக்கட்சிகள் நிறைய இருப்பதாக கூறி ஒரு தகுதி தருகிறோம்.  அது உங்கள் விருப்பப்படி எந்த தொகுதி கேட்டாளும் தருகிறோம் என்று கூறிவிட்டனர். தலைவர் எங்களிடம் ஆலோசித்தார். வாசன் மயிலாடுதுறை தொகுதியில் நிற்கலாம் என யோசித்திருந்தார்.  சொந்த தொகுதி என்பதால் அதையே கேட்பார்.  நிச்சயம் கிடைத்துவிடும்.  மயிலாடுதுறையில் போட்டியிடுவது உறுதி". என்றார் அவர்.

 

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக எம்பியான பாரதிமோகனின் நிலைமை என்ன என்பதை விசாரித்தோம்," நவக்கிரகத்தில் ஒன்றான சுக்கிரன் தலமான கஞ்சனூர் கிராமத்தில், அடுத்த கிராமத்திற்கே தெரியாத சாதாரண விவசாயியாக இருந்த பாரதிமோகனுக்கு பதவிகள் மட்டுமல்ல, பணமும் தானாகவே குவிந்துவிட்டன. அற்பனுக்கு வாழ்வு வந்தது போலவே பாரதிமோகனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தபடியே இருந்தது. அத்தனையும் வைத்தியலிங்கம் மூலம் ஜெயலலிதாவால் கிடைத்தது. யாரும் எதிர்பார்த்திடாத நிலையில் திருவிடைமருதூர், எம்.எல்.ஏ.  பிறகு எம்.பி. என மாறி மாறி பதவிகளும் அதன்மூலம்  வசதியையும் கூட்டிக்கொண்டார். 

 

கட்சிக்காரனுக்கோ, பொதுமக்களுக்கோ,  எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் அவர் செய்து கொடுத்ததில்லை. இது அவருக்கே தெரிந்து இந்த முறை நான் போட்டியிடப் போவதில்லை,  என திருப்பனந்தாள் பகுதியில் உள்ள தனது ஆதரவாளர்களிடம் சமீப காலமாக கூறிவந்தார். கட்சித்தலைமை போட்டியிட சொன்னால் மட்டுமே போட்டியிடுவேனே தவிர நான் அழுத்தமாக கேட்கமாட்டேன். மீண்டும் போட்டியிட்டால் பணமும் போயிடும், பதவியும், மறியாதையும் போயிடும் என கிசுகிசுத்து வந்தார்.

 

 இந்தமுறை கூட்டணி கட்சிக்கு தொகுதி என்று கட்சி தலைமை கூறிவிட்டால்,  "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது" என்பது போல சைலண்டாகி,  நிமிர்ந்து வருவார். மீண்டும் சீட்டு கொடுத்துவிட்டால் கடந்த முறை வெற்றிபெற்று நன்றி சொல்லவே போகலையே,  எப்படி ஒட்டு கேட்கபோவது என நெலியத்துவங்கிடுவார்". என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.