Skip to main content

சொல்லாமலே படுகொலையில் முடிந்த ஒருதலைக் காதல்!

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Girl's father incident in a head-on affair

 

தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி நகரைச் சேர்ந்தவர் அய்யாக்குட்டி. நகரிலுள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருபவர். மனைவி கனகலட்சுமியோ பீடி சுற்றும் தொழிலாளி. தம்பதியருக்கு எம்.எஸ்.சி படித்த பட்டதாரியான ஆவுடைச்செல்வி (25) ஒரே மகள். இச்சூழலில் தன் மகள் ஆவுடைச்செல்விக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்ய ராயகிரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை அய்யாக்குட்டி திருமணம் பேசி முடித்திருக்கிறார். வருகிற 23ம் தேதி இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

 

திருமண ஏற்பாடுகளைக் கவனித்து வந்த அய்யாக்குட்டி, நேற்று முன்தினம் அவர், அவரது மனைவி, மகள் ஆகியோர் தனி அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் வீட்டின் முன் கதவைப் பூட்ட மறந்துவிட்டு தூங்கியுள்ளனர். நடு இரவு சுமார் 12 மணியளவில் வீடு புகுந்த மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்த அய்யாக்குட்டியை கத்தரிக் கோலால் கழுத்தில் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடியிருக்கிறார். துடிதுடித்து படுகாயமடைந்த அய்யாக்குட்டி சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார். அவரது கதறல் சத்தம் கேட்டு மனைவி மற்றும் மகள் தூக்கத்திலிருந்து பதறி எழுந்து வந்து பார்த்த போது அய்யாக்குட்டி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அலறினர்.

 

தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரணையை நடத்தியிருக்கிறார்கள். கனகலட்சுமி மற்றும் அவரது மகள் ஆவுடைச்செல்வியிடம் தனித் தனியே விசாரணை நடத்திய போலீசார் அவர்களிருவரின் அலைபேசியையும் பறிமுதல் செய்தனர். பல கோணங்களில் விசாரணை பயணித்தது.

 

பின்னர் அப்பகுதியிலுள்ள கோவிலின் பக்கமுள்ள தெரு பிற இடங்களிலுள்ள அனைத்து சி.சி.டி.வி.களிலும் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தவர்கள் அதில் பேண்ட் சர்ட் அணிந்த 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் நள்ளிரவில் பைக்கில் செல்லும் காட்சி பதிவானதைக் கண்டு அவரைத் தீவிரமாகத் தேடினர். தீவிரத் தேடுதலில் அந்த மர்ம நபரை வளைத்து விசாரித்ததில் பக்கத்திலுள்ள டி.என்.புதுக்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் என்பது தெரிய வந்திருக்கிறது.

 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்த செல்வமுருகன் தன் தந்தையுடன் காண்ட்ராக்ட் பணியிலிருப்பவர். அய்யாகுட்டியின் மகள் ஆவுடைச்செல்வி மீது தனக்கு அளவு கடந்த காதல். ஆனால் என் காதலை அவளிடம் சொல்லாமலே இருந்துவிட்டேன். ஒருதலைக் காதல். ஆவுடைச்செல்விக்கு திருமணம் பேசி முடித்து விட்டதை அறிந்த நான் அன்றைக்கு என் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டுமென்ற துடிப்பில் நடு இரவு போதையில் அவள் வீட்டிற்குச் சென்றேன். அப்ப அவளோட தந்தை தூங்கிக் கொண்டிருந்தவர் சத்தம் கேட்டு எழுந்துவிட்டார். பயந்து போன நான் திடீர்னு பக்கத்துல கிடந்த கத்தரிக்கோலால் அவரது கழுத்தில் குத்திவிட்டு வெளியே ஓடிவந்து விட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் செல்வமுருகனை கைது செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

இளம் பெண் ரயில் நிலையம் அருகே கொடூரக் கொலை; பின்னணி என்ன ?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
A young woman from Chennai was passed away near Gudiyattam railway station

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.