Skip to main content

கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட காதலி போட்ட திட்டம்: விசாரித்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
manjula


சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கம் பாரதிநகரைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி மஞ்சுளா. ரித்தேஸ்சாய் என்ற 10 வயது மகன் உள்ளான். மஞ்சுளாவுக்கு நாகராஜ் என்பவருடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் சந்திப்புக்கு ரித்தேஸ்சாய் வீட்டில் இருப்பதால் தாங்கள் இருவரும் சந்திக்க முடியவில்லை என்று நாகராஜும் மஞ்சுளாவும் என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு, ரித்தேஸ்சாயை டியூசன் சேர்க்க முடிவு செய்துள்ளனர். அதன்படி ரித்தேஸ்சாயை விஜயா டியூசனுக்கு சேர்த்துள்ளார்.
 

ரித்தேஸ்சாய்க்கு நாகராஜை அறிமுகப்படுத்திய விஜயா, இவர் நமக்கு தெரிந்தவர்தான் நல்லவர், இவர் உன்னை டியூசனுக்கு கொண்டுவிடுவார், பின்னர் அவரே உன்னை திரும்ப வீட்டுக்கு அழைத்து வருவார் என்று சொல்லியிருக்கிறார். இப்படியே இவர்கள் கள்ளக்காதல் தொடர்ந்து கொண்டிருக்க, ஒரு நாள் இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை ரித்தேஸ்சாய் பார்த்துவிட்டான். தனது தந்தையிடமும் சொல்லிவிட்டான்.
 

 

 

இதனை அறிந்தவுடன் கார்த்திகேயன் மஞ்சுளாவை கண்டித்ததோடு, நாகராஜை இனி இந்தப் பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன், சிறுவன் ரிதேஷைக் சேலையூர் அருகே கடத்திச் சென்றுள்ளான். கடந்த பிப்ரவரி 28-ந் தேதி ரித்தேஸ்சாய் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். இந்த செய்தி தமிழகத்தையே உலுக்கியது. 
 

சிறுவன் ரிதேஷைக் கடத்திச் சென்று சேலையூர் அருகே மது ஊற்றிக் கொடுத்து கம்பியால் கொடூரமாக நாகராஜ் அடித்துக் கொன்றது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து நாகராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இந்த நாகராஜன் விரைவில் ஜாமீனில் வெளி வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

nagaraj


 

இந்நிலையில் மஞ்சுளா, ஒரு பொருள் வாங்குவதற்காக பிரசாந்த், சுரேஷ் என்ற இருவரிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அவர்கள் அந்தப் பொருளுக்கு பதிலாக பொம்மையைப் போல் ஒன்றைக் கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும், சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

 

 

அது என்ன பொருள் என போலீசார் விசாரித்தனர். அது பொம்மை போல இருக்குது சார் என்று மாறி மாறி பேசினார் மஞ்சுளா. போலீசார் அதிரடியாக துருவி துருவி விசாரித்த போது, துப்பாக்கி வாங்குவதற்காக தாம் பணம் கொடுத்ததாகவும், பொம்மைத் துப்பாக்கியை வாங்கிக் கொடுத்து அவர்கள் ஏமாற்றி விட்டதாகவும் மஞ்சுளா தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தமது மகனை கொடூரமாக கொலை செய்த கள்ளக் காதலன் நாகராஜனை சுட்டுக் கொன்று பழிதீர்ப்பதற்காகவே துப்பாக்கி வாங்க மஞ்சுளா முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது. 
 

இதையடுத்து, அனுமதியின்றி துப்பாக்கி வாங்க முயன்றதற்காக மஞ்சுளாவையும், துப்பாக்கி வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதற்காக பிரேம், சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் வேறு ஏதும் மர்மங்கள் புதைந்துள்ளனவா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது