Skip to main content

திருவாரூரில் மோசடி செய்தவனை விரட்டிப்பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த பெண்

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பவதாக பண மோசடி செய்தவரை விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஓப்படைத்தார் ஒரு பெண், அந்த துணிச்சலான சம்பவத்தால் திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

police

 

 

 

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தை சோ்ந்தவர் ஐய்யபன். இவர் மற்றும் சிலர் பொதக்குடியில் உள்ள முகமது தாரிக் என்பவரிடம் கத்தார் நாட்டில் உள்ள சூப்பர் மார்கெட்டில் பணிபுரிவதற்காக ரூ1.75 லட்சத்தை வழங்கியுள்ளனர். இதனையடுத்து கடந்த பொங்கல் பண்டிகை அன்று விமான டிக்கெட் மற்றும் விசா வழங்கி திருச்சி விமான நிலையத்திற்கு ஐய்யபன் மற்றும் பணம் கொடுத்தவர்களை வரவழைத்துள்ளார் முகமது தாரிக். விமான நிலையம் வந்தவர்களை விமானம் சென்னையிலிருந்துதான் என கூறி அனைவரையும் சென்னை அழைத்து சென்று அங்கு விடுதியில் அறை எடுத்து மூன்று தினங்கள் தங்க வைத்துவிட்டு முகமது தாரிக் தலைமறைவாகி விட்டார்.

 

அப்போதுதான் விசா மற்றும் விமான டிக்கெட் அனைத்து போலியானது என தொியவந்துள்ளது. அதன்பின்னர் முகமது தாரிக்கை பாதிக்கப்பட்டவர்கள் தேடியுள்ளனர் ஆனால் அவர் கிடைக்கவில்லை. 

 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஐய்யபனின் மனைவி கௌசல்யா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றும் வரும் தனது உறவினரை பார்க்க சென்ற போது அங்கு 7 மாதமாக ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாக இருக்கும் முகமது தாரிக்கை பார்த்து அதிர்ச்சியைடைந்து அவரை பிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது முகமது தாரிக் தப்பித்து ஓடியுள்ளார். தைரியசாலியான கௌசல்யா அவரை இழுத்து பிடித்து மருத்துவக்கல்லூரி காவல்துறை விசாரணை அலுலகத்தில் அடைத்து வைத்துள்ளார். 

 

police

 

 

 

பின்னர் திருவாரூர் தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் தொிவித்து அவர்களை வரவழைத்து அவர்களிடம் உரிய விவரத்தை தொிவித்து காதரை ஒப்படைத்தார். முகமது தாரிக் கைது செய்த காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.