Skip to main content

கண்ணை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிய மாணவி... அதிசயத்த அதிகாரிகள்!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

திருவண்ணாமலை நகரில் பெண்கள் சாதனை கண்காட்சி தொடக்க விழா ஜனவரி 23ந்தேதி, திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கண்ணை கட்டிக்கொண்டு ஒரு மாணவி சைக்கிள் ஓட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியரை அந்த மண்டபத்துக்கு அழைத்து சென்றது வித்தியாசமாக, பரபரப்பாக பேசப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றியம், முனுகப்பட்டு கிராமத்தில் பட்டு கைத்தறி நெசவுத் தொழில் செய்து வருகிறார் ஏழை நெசவாளர் குமரன். இவரது மனைவி அனிதா, இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். 12 வயது சுருதி, 9 வயதில் காஞ்சனா என உள்ளனர். குமரனின் இரண்டு மகள்களும் முனுகப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் முறையே 6-ம் வகுப்பும், 3-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.


 

 The girl who do cycling with closed eyes

 

இதில் மாணவி சுருதி தனக்கேன்று தனித் திறமை ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வளர்த்துக் கொண்டுள்ளார். அதாவது சுருதியால் தனது இரண்டு கண்களையும் கட்டிக் கொண்டு மிதிவண்டி ஓட்டுவது, வரை படத்திற்கு வண்ணம் தீட்டுவது, நிறங்களை கூறுவது, சதுரங்கம்,  கியூப் விளையாடுவது, உருவங்களை அடையாளம் காண்பது, பின்தொடர்வது, உட்பட பல்வேறு தனித் திறன்களை பெற்றுள்ளார்.

 

 The girl who do cycling with closed eyes

 

மாணவியின் இந்த திறமைகளை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார். அவரது திறமைகள் கண்டு பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாணவி சுருதி தனது இரண்டு கண்களையும் கட்டிக் கொண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்களுடன் பெண்கள் சாதனை நிகழ்ச்சி நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும் ஒரு மதிவண்டி என்கிற சைக்கிளில் சென்றார். சுமார் 1 கி.மீ தூரம் அந்த மாணவி கண்ணைக்கட்டிக்கொண்டு வாகனங்கள் அதிக பயணமாகும் சாலையில் பயணம் செய்தார். அந்த நிகழ்ச்சி நடைபெறும் மண்டபம் வரை சென்றார்.

 

 The girl who do cycling with closed eyes


நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் அமலராக்கினி பார்வையற்ற பள்ளியை சேர்ந்த பெண்களின் கைப்பந்து போட்டியை பார்வையிட்டார். அதேபோல், திருவண்ணாமலையை சேர்ந்த 2½ வயது குழந்தை லக்ஷனா தனது தாயார் கேட்ட திருக்குறள், தலைவர்கள் பெயர், திருப்பாவை, ஸ்லோகம் ஆகியவற்றினை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சிறப்பாக எடுத்துரைத்து அனைவரது கவனத்தையும் ஈத்தார்.
 

 The girl who do cycling with closed eyes

 

மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசும்போது, பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட அளவில் பெண்களின் சாதனைகள் காட்சி படுத்துவதற்கு வாய்ப்பு தருவதற்கு இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இத்திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக கடந்து ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் பல்வேறு சாதனைகள் வெளிக்கொண்டு வருவதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. வாழ்க்கையில் படிப்பு மட்டும் சாதனை கிடையாது, பல்வேறு தனித் திறன்கள் கொண்ட பெண்களுக்கு படிப்புடன் அவர்களின் திறமைகளும் சாதனை தான்.

வாழ்க்கையில் கஷ்டப்பட்டால் அனைத்து சாதனைகளும் நிகழ்த்தலாம். நம் எண்ணங்களை வெளியில் கொண்டு வரவேண்டும். தினமும் காலையில் எழுந்து இன்று என்ன செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டால் உங்கள் இலட்சியத்தை அடையலாம். வாழ்க்கையில் ஏற்படும் தடைகற்களை உடைத்து சாதிக்க வேண்டும். வாய்ப்புகளை இழந்துவிட்டால் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காது. வாய்ப்புகள் வரும் போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் திறமை, ஆற்றல் வெளிக்கொண்டு வந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். மற்றவர்கள் வாழ்க்கையுடன் உங்களை ஒப்பிட்டு பார்கக்கூடாது. ஒவ்வொரு விஷயத்தையும் உள்வாங்கி விரும்பி, விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி கிடைக்கும்’ என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.