Skip to main content

இரண்டாம் திருமணம் செய்த இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை..! 

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

Girl passes away near tenkasi

 


தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ளது கல்லூத்து. இங்குள்ள கூலித் தொழிலாளியான பொன்ராஜூ (30) என்பவருக்கும், நெல்லை மாவட்டத்தின் வி.கே.புரம் பக்கமுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் மகள் சங்கீதா (20) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. நேற்றைய தினம் (22.07.2021) பொன்ராஜ் வழக்கம்போல் கூலி வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் சங்கீதா மட்டுமே தனியாக இருந்திருக்கிறார். 

 

அந்த சமயம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் நுழைந்து சங்கீதாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார். இதில் அதிகளவில் ரத்த வெளியேறி சம்பவ இடத்திலேயே சங்கீதா உயிரிழந்துள்ளார். தகவலறிந்து ஸ்பாட்டிற்கு வந்த சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ், வீ.கே.புதூர் எஸ்.ஐ. காஜா மைதீன் உள்ளிட்ட போலீசார், அந்தப் பகுதியில் விசாரணை நடத்தினர். அதன் பின் சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி பாளை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.

 

இந்த மர்மக் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடந்த அன்று அந்தத் தெருவில் உள்ளவர்கள், கிராமத்தில் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்காகச் சென்றுவிட்டனர். அது சமயம் தெருவே காலியாக இருந்தது. அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பைக்கில் ஒருவர் அந்த வீட்டிற்கு வந்து சென்றதைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்தத் தகவலைக் கொண்டு போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில் கொலைக்கான மர்மம் வெளிப்பட்டிருக்கிறது. 

 

Girl passes away near tenkasi

 

சங்கீதாவை கொலை செய்தது அவரது முதல் கணவரான கண்ணன் என்பது தெரியவந்திருக்கிறது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அம்பை அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த நாரயணனின் மகன் கண்ணன் (30) என்பவருக்கும் சங்கீதாவிற்கும் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்குப் பின்பு ஒரு மாதம்வரை அவர்களுக்கிடையே பிரச்சனை இல்லாமல் போயிருக்கிறது. அதன் பின் அவர்களுக்குள் ஏற்பட்ட பிணக்கால் சங்கீதா, கண்ணனைவிட்டுப் பிரிந்து தன் தாய்வீடு சென்றிருக்கிறார். திருமணமாகி ஒரே மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால், கண்ணனின் உறவினர்கள் மற்றும் மத்தியஸ்தர்கள் பெண் வீட்டாரிடம் பேச்சு நடத்தியும் இருவரும் ஒன்றுசேர முடியமால் போயிருக்கிறது.

 

Girl passes away near tenkasi

 

இப்படியே இரண்டு வருடம் கழிந்த நிலையில், மேலும் முறையாக இவர்களுக்குள் விவாகரத்து பெறாத சூழ்நிலையில்தான் சங்கீதாவிற்கு கடந்த 60 நாட்களுக்கு முன்பு கல்லூத்தைச் சேர்ந்த பொன்ராஜை இரண்டாவது திருமணம் செய்துவைத்துள்ளனர். பொன்ராஜூம் இதனை அறிந்தவர்தான். இதனிடையே சங்கீதா தன்னை விட்டுவிட்டு இன்னொருத்தரை இரண்டாம் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த முதல் கணவர் கண்ணன், அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்திருக்கிறார். அந்த நோக்கத்தில்தான் அன்றைய தினம் கண்ணன் பைக்கில் கல்லூத்திற்கு வந்திருக்கிறார். அது சமயம் அந்தத் தெருவாசிகள் துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றது கண்ணனுக்கு வாய்ப்பாகிவிட்டது. அதேநேரம் பொன்ராஜூம் கூலி வேலைக்குச் சென்றுவிட, தனியாக இருந்த சங்கீதாவைக் கண்ணன் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவுசெய்த வீ.கே.புதூர் போலீசார், முதல் கணவரான கண்ணனை கைது செய்திருக்கிறார்கள்.

 

முறைப்படி விவாகரத்து பெறாமலும் வீட்டில் தனியே இருந்த பெண் ஒருத்தி திருமணமாகி அறுபதே நாளில் கொலை செய்யப்பட்டதும் அந்தக் கிராமத்தைப் பீதியில் தள்ளியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.