Skip to main content

தந்தையை கொன்ற மகள் விடுதலை! 

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Girl has been released from police custody in father case

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கோவில் புறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(40). மாற்றுத்திறனாளியான இவரின் மனைவி ரேவதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். வெங்கடேசனுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் அவலூர்பேட்டை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தனது இளைய மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, மது போதையில் வீட்டிற்கு வந்த வெங்கடேசன், தனது இளைய மகளிடம் வரம்பு மீறி நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது மகள் அருகிலிருந்த கத்தியால் தனது தந்தையின் மார்பில் குத்தியுள்ளார். அதில் 11 அங்குலம் ஆழத்திற்கு அந்தக் கத்தி அவரது நெஞ்சில் பாய்ந்துள்ளது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மகள் தான் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 

 

கைது செய்யப்பட்ட அவர், போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர், “எனது தாய் இறந்த பிறகு, பாட்டி வீட்டில் தான் நானும் என் சகோதரியும் வளர்ந்து வந்தோம். அவர் தற்போது சென்னையில் வேலை செய்து வருவதால் நான் பாட்டி வீட்டில் தங்கி இருந்தேன். தற்போது பள்ளி திறக்கப்பட்டு உள்ளதால் நான் படிக்கும் அவலூர்பேட்டை பள்ளிக்குச் செல்வதற்குப் பாட்டி வீட்டிலிருந்து தினசரி சென்று வருவதற்குச் சிரமம் ஏற்பட்டது. அதனால் எனது சொந்த ஊரிலிருந்து பள்ளிக்குச் சென்று வந்தேன்.

 

இந்த நிலையில் எனது தந்தை, தான் பெற்ற மகளென்றும் பாராமல் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அவரிடமிருந்து அவ்வப்போது தப்பித்து வந்தேன். ஆனால், சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த என்னிடம், தந்தை குடிபோதையில் எல்லை மீறி நடந்து கொண்டார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கடுமையாகப் போராடினேன். ஆனால், அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அவரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள அருகில் கிடந்த கத்தியை எடுத்து அவரது நெஞ்சில் குத்தினேன். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து இறந்து போனார். அப்போது செய்வதறியாது திகைத்த நான், பக்கத்து வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இதை எப்படி வெளியே சொல்வது என்று புரியாமல் மீண்டும் வீட்டுக்கு வந்தேன். அப்போதுதான் நான், அவரை யாரோ கத்தியால் குத்தியது போல நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று நடந்த சம்பவத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

 

இதையடுத்து மாவட்ட காவல் காவல்துறை, ‘இந்தியத் தண்டனைச் சட்டம் விதி 100ன் கீழ்’ ஒரு பெண் தனியாக இருக்கும்போது, அவரது கற்புக்கு ஆணிடமிருந்து தீங்கு ஏற்படுமானால் அவரிடமிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலையில், தன்னை காப்பாற்றிக் கொள்ள வேறு வழி இல்லாத காரணத்தினால் இதுபோன்று நடந்து கொள்ளலாம். அப்படி நடந்துகொண்ட பெண்களுக்குத் தண்டனைச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு உள்ளது. அதனடிப்படையில் மாணவியைக் கைது செய்து விடுதலை செய்வதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர். மேலும் அவருக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என அவருக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.