Skip to main content

தந்தையை கொன்ற மகள் விடுதலை! 

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Girl has been released from police custody in father case

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கோவில் புறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(40). மாற்றுத்திறனாளியான இவரின் மனைவி ரேவதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். வெங்கடேசனுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் அவலூர்பேட்டை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தனது இளைய மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, மது போதையில் வீட்டிற்கு வந்த வெங்கடேசன், தனது இளைய மகளிடம் வரம்பு மீறி நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது மகள் அருகிலிருந்த கத்தியால் தனது தந்தையின் மார்பில் குத்தியுள்ளார். அதில் 11 அங்குலம் ஆழத்திற்கு அந்தக் கத்தி அவரது நெஞ்சில் பாய்ந்துள்ளது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மகள் தான் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 

 

கைது செய்யப்பட்ட அவர், போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர், “எனது தாய் இறந்த பிறகு, பாட்டி வீட்டில் தான் நானும் என் சகோதரியும் வளர்ந்து வந்தோம். அவர் தற்போது சென்னையில் வேலை செய்து வருவதால் நான் பாட்டி வீட்டில் தங்கி இருந்தேன். தற்போது பள்ளி திறக்கப்பட்டு உள்ளதால் நான் படிக்கும் அவலூர்பேட்டை பள்ளிக்குச் செல்வதற்குப் பாட்டி வீட்டிலிருந்து தினசரி சென்று வருவதற்குச் சிரமம் ஏற்பட்டது. அதனால் எனது சொந்த ஊரிலிருந்து பள்ளிக்குச் சென்று வந்தேன்.

 

இந்த நிலையில் எனது தந்தை, தான் பெற்ற மகளென்றும் பாராமல் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அவரிடமிருந்து அவ்வப்போது தப்பித்து வந்தேன். ஆனால், சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த என்னிடம், தந்தை குடிபோதையில் எல்லை மீறி நடந்து கொண்டார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கடுமையாகப் போராடினேன். ஆனால், அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அவரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள அருகில் கிடந்த கத்தியை எடுத்து அவரது நெஞ்சில் குத்தினேன். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து இறந்து போனார். அப்போது செய்வதறியாது திகைத்த நான், பக்கத்து வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இதை எப்படி வெளியே சொல்வது என்று புரியாமல் மீண்டும் வீட்டுக்கு வந்தேன். அப்போதுதான் நான், அவரை யாரோ கத்தியால் குத்தியது போல நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று நடந்த சம்பவத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

 

இதையடுத்து மாவட்ட காவல் காவல்துறை, ‘இந்தியத் தண்டனைச் சட்டம் விதி 100ன் கீழ்’ ஒரு பெண் தனியாக இருக்கும்போது, அவரது கற்புக்கு ஆணிடமிருந்து தீங்கு ஏற்படுமானால் அவரிடமிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலையில், தன்னை காப்பாற்றிக் கொள்ள வேறு வழி இல்லாத காரணத்தினால் இதுபோன்று நடந்து கொள்ளலாம். அப்படி நடந்துகொண்ட பெண்களுக்குத் தண்டனைச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு உள்ளது. அதனடிப்படையில் மாணவியைக் கைது செய்து விடுதலை செய்வதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர். மேலும் அவருக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என அவருக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.