Skip to main content

ரயில் நிலையத்தில் காவல்துறையினர் மீட்ட தங்கமகள்; 3 மாத பெண் குழந்தைக்கு ஏற்பட்ட சோகம்

Published on 07/05/2023 | Edited on 07/05/2023

 

Girl child recovered by the police at the railway station; Tragedy of a 3-month-old baby girl

 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி (63) என்பவர் (03.05.2023) இரயிலுக்காக வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்தில் நடை மேடை எண் ஒன்றில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் கைக் குழந்தையுடன் வந்த பெண்மணி ஒருவர், தனது 6 மாத பெண் குழந்தையைக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பார்த்துக் கொள்ளும்படியும், ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் குழந்தையைக் கொடுத்த பெண் வராததால் பதற்றம் அடைந்த சுந்தரி காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள இரும்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

 

அதில் ஆறு மாத பெண் குழந்தையை மூதாட்டி சுந்தரியிடம் ஒப்படைத்துச் செல்லும் பெண்மணி வெளியில் காத்துக் கொண்டிருந்த தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேக வேகமாக ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார். இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காட்பாடி இரும்புப் பாதை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தையை விட்டுச் சென்ற பெண்மணி மற்றும் அவரது கணவர் ஏறிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைக்கு ஆறு மாத குழந்தையை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைத்துள்ளனர். வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் கடந்த 3 ஆம் தேதி 3 மாத பெண் கைக்குழந்தையைப் பெற்ற தாயே அனாதையாக விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Girl child recovered by the police at the railway station; Tragedy of a 3-month-old baby girl

 

இதனைத் தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். குழந்தையை விட்டுச் சென்ற, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த குழந்தையின் பெற்றோர் விஜய் மற்றும் கலைச்செல்வியை 24 மணி நேரத்தில் வேலூர் காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீசார் கண்டுபிடித்தனர்.

 

Girl child recovered by the police at the railway station; Tragedy of a 3-month-old baby girl

 

பெற்றோரை வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், விஜய் மற்றும் கலைச்செல்விக்கு அறிவுரை கூறினர். குழந்தைக்கு சென்னை ரயில்வே எஸ்.பி பொன்ராமு தங்கமகள் எனப் பெயர் சூட்டினார். பின்னர் குழந்தையை வேலூர் குழந்தைகள் நலக் குழுமத்தில் போலீசார் ஒப்படைத்த நிலையில், குழந்தையின் பெற்றோரான விஜய் மற்றும் கலைச்செல்வியிடம் குழந்தைகள் நல குழுமத்தினர் விசாரணை நடத்தி காப்பகத்தில் ஒப்படைக்கலாமா அல்லது பெற்றோருடன் அனுப்பலாமா என முடிவு செய்வார்கள் என இன்ஸ்பெக்டர் சித்ரா தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

West Bengal Kulti Railway Station fire incident

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலம் பாஸ்கிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள அசன்சோலில் என்ற பகுதியில் குல்டி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் தளவாட பொருட்கள் வைத்திருந்த இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.