Skip to main content

மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...போக்சோ சட்டத்தில் கைது...

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

அரசு மருத்துவ கல்லூாரி மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.
 

subin

 

 

தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டே வருகிறது. இந்த கொடூர குற்ற செயலில் ஈடுபடும் வக்கீர புத்தி கொண்டவா்கள் கடுமைாக தண்டிப்பட வேண்டும் என போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. அச்சட்டம் வந்த பிறகும் அதை பொருட்படுத்தாமல் பெண் குழந்தைகளை சீண்டி கொண்டு தான் இருக்கிறார்கள். 

 
இதில் தமிழகத்தில் சமீப காலமாக தினம் தினம் ஓன்றுக்கு மேற்ப்பட்டோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனா். இது பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

இந்த நிலையில் குமாரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமயைில் வட மாநிலத்தை சோ்ந்த பெண் ஓருவா் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டியிருந்தார். அவருடன் தன்னுடைய  11 வயது பெண் குழந்தையையும் உடன் வைத்திருந்தார். அந்த பெண் குழந்தை மருத்துவமனை வளாகத்தில் அனைவரிடமும் சகஜமாக பேசி அங்கு மிங்கும் ஓடியாடி விளையாடி கொண்டிருந்தார்.
 

hospital

 

 

இந்த நிலையில் இன்று மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஓப்பந்தத்தின் அடிப்படையில் காவலாளியாக பணி புரியும் சுபின் (24) என்ற வாலிபா் அந்த பெண் குழந்தையை நைசாக அழைத்து சென்று ஒரு அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது அந்த குழந்தை சத்தம் போட்டு அழுததால் மற்ற நோயாளிகளின் உறவினா்கள் இதை பார்த்துவிட்டனா். இதனால் சுபின் அங்கிருந்து தப்பி ஓடும்போது  மருத்துவமனை ஊழியா்கள் அவனை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால், சுபின் அங்கிருந்து தப்பித்துவிட்டார்.
 

இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் குமுதாவிடம் புகார் கூறினார்கள். உடனே சம்பவ இடத்துக்கு சென்ற குழுதா பாதிக்கப்பட்ட குழந்தையிடம் விசாரித்து விட்டு நாகா்கோவில் அனைத்து மகளீா் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் தப்பி ஓடிய சுபினை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். 

             
இச்சம்பவம் மருத்துவ மனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.