Skip to main content

திருச்சி - 4 பேரக்குழந்தைகள் உள்ள பெண் 11வது பிரசவத்திற்காக முதல் முறையாக ம.மனையில் அனுமதி

Published on 26/10/2018 | Edited on 26/10/2018


 

Musiri

 

4 பேரக்குழந்தைகள் உள்ள பெண் 11வது பிரசவத்திற்காக முதல் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு வயது 48. இவருக்கு சாந்தி என்ற மனைவி (வயது 45) உள்ளார். இவர்களுக்கு 11 குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. சீதா, கீதா (20), கார்த்திக் (19), உதயகுமாரி (17), தர்மராஜ் (16), சுபலட்சுமி (13), கிருத்திஸ்கா (11), தீப்தி (9), தீபக் (9),  ரிட்டிஸ் கண்ணன் (7), பூஜா (5) ஆகிய 11 குழந்தைகள் உள்ளனர். 
 

இவர்களில்  சீதாவுக்கு திருமணமாகி உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். தீப்தி, ரிட்டிஸ் கண்ணனும் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டனர். தற்போது 8 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். யாருடைய துணையும் இல்லாமல் மனைவியின் பிரவத்தை இதுவரை கண்ணன் தனது வீட்டிலேயே பார்த்துள்ளார். இதுவரை அவர் மருத்துவமனைக்கு சென்றது இல்லை. 
 

இந்த நிலையில் சாந்தி தற்போது மீண்டும் கர்ப்பமுற்றார். இதனை அறிந்த சுகாதார செவிலியர்கள் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளனர். சாந்தி மறுத்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான சாந்தி மருத்துவமனைக்கு வர மறுப்பதாக அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். 
 

உயர் அதிகாரிகளான உஷாராணி, கார்த்திக், கீதா, ஆகியோர் முசிறிக்கு சாந்தியை சந்திப்பதற்காக சென்றனர். தகவல் அறிந்த சாந்தி, அதிகாரிகள் வருவதை அறிந்து ஆற்றங்கரையில் ஒளிந்து கொண்டார். 
 

இதையடுத்து முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சாந்தியை தேடி கண்டுபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது அதிகாரிகள் அறிவுரை கூறியதையடுத்து மருத்துவமனைக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அதிகாரிகளின் காரிலேயே அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
 

மருத்துவமனையில் இருப்பதை அறிந்து மருத்துவமனைக்கு வந்த கண்ணன், தனக்கு 4 பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு பலமுறை அறிவுரை கூறியும், அதனை ஏற்க சாந்தி மறுத்துவிட்டார் என தெரிவித்தார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டா மாற்றத்திற்கு லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Bribery for change of belt The tahsildars were caught in the dark

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் முசிறியில் வசித்து வருபவர் கோபால் மகன் கிருஷ்ணன் (வயது 40). இவர் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பெயரில் முசிறியில் சொந்தமாக ஒரு வீடும் ஒரு காலியிடமும் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இதுவரை வருவாய்த் துறையிலிருந்து பட்டா பெறப்படவில்லை. அதனால் கிருஷ்ணன் தனது தாயார் பெயரில் மேற்படி இரண்டு இடத்திற்கும் பட்டா பெறுவதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கடந்த பிப்ரவரி (2023) மாதத்தில் மனு செய்துள்ளார்.

மேலும் தனது பட்டா சம்பந்தமாக கிருஷ்ணனுக்கு எந்த தகவலும் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கிடைக்கப் பெறாததால் கிருஷ்ணன், முசிறி கிழக்கு பகுதி விஏஓ அலுவலகம் சென்று விஏஓ விஜயசேகரை சந்தித்து தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு விஏஓ விஜயசேகர் உங்க இடத்தை மண்டல வட்டாட்சியர் வந்து பார்வையிட வேண்டும் என்று கூறியுள்ளார். பின் நவம்பர் மாதத்தில் விஏஓ ராஜசேகர் முசிறி மண்டல வட்டாட்சியர் தங்கவேலை அழைத்துக் கொண்டு கிருஷ்ணனின் இடத்தைப் பார்வையிட்டு விட்டு தாலுக்கா அலுவலகம் வருமாறு கூறிச் சென்றுள்ளனர்.

அதன் பேரில் கிருஷ்ணன் நேற்று (26.12.2023) மாலை 6 மணி அளவில் முசிறி வட்டாட்சியர் அலுவலகம் சென்று மண்டல வட்டாட்சியர் தங்கவேலை சந்தித்து தனது பட்டா குறித்து கேட்டுள்ளார். அப்போது மண்டல வட்டாட்சியர் தங்கவேல் கிருஷ்ணனிடம் உங்களுக்கு இரண்டு இடத்திற்கும் பட்டா பெற்றுத் தருவது என்றால் ஒரு பட்டாவுக்கு 15 ஆயிரம் வீதம் இரண்டு பட்டாவுக்கு முப்பதாயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டுமாறு கேட்டுள்ளார். கிருஷ்ணன், தொகையை குறைத்துக் கூறுமாறு மண்டல வட்டாட்சியரிடம் கேட்டதன் பேரில் மண்டல வட்டாட்சியர் 5 ஆயிரம் குறைத்துக் கொண்டு 25 ஆயிரம் கொடுத்தால்தான் பட்டா பெற்றுத் தர முடியும் என்று கண்டிப்பாகக் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்குச் சென்று அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, இன்று (27.12.2023) மாலை 5:30 மணி அளவில் கிருஷ்ணனிடம் இருந்து மண்டல வட்டாட்சியர் தங்கவேல் லஞ்சப் பணம் 25 ஆயிரத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ் பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் மண்டல வட்டாட்சியர் தங்கவேலை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். 

Next Story

நோட்டமிட்ட கொள்ளையர்கள்; திருவிழாவுக்கு சென்றுவிட்டு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி 

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

trichy musiri azhagu perumalpatti incident 

 

பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் முசிறியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அழகு பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவி, குழந்தைகளுடன் பொன்னாங்கண்ணிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு இரவு வீடு திரும்பினர்.

 

அப்போது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 3 பவுன் செயின் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பாக முசிறி போலீசில் மணிமாறன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.