Skip to main content

மனநலம் பாதித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
Gingee

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது அறியலூர் திருக்கை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகள் 35 வயது அஞ்சலாட்சி. இவர் மனநலம் பாதித்தவர். இவர் தற்போது இவருடைய அண்ணி சங்கீதா என்பவருடைய பராமரிப்பில் இருந்து வருகிறார். அவரது அண்ணி சொல்லும் வேலைகளை மட்டும்  செய்து வரும் அஞ்சலாட்சியை மனநலம் பாதித்தவர் என்பதால் வெளியில் எங்கும் அனுப்புவது இல்லை.

 

இந்த நிலையில் தங்கள் கிராமத்தில் நடக்கும் மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அஞ்சலாட்சியை அவரது அண்ணி சங்கீதா அவ்வப்போது அழைத்துச் செல்வது வழக்கம். வேலை முடிந்த பிறகு சங்கீதா அவர்களது சொந்த வயலில் வேலை செய்வதற்கு செல்லும்போது அஞ்சலாட்சியை மட்டும் தனியாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இப்படி தனியாக வரும் அஞ்சலாட்சியை தினசரி நோட்டமிட்ட அதே ஊரைச் சேர்ந்த வீரமணி என்பவரது மகன் சங்கர் (வயது 35) வழிமறித்து அஞ்சலாட்சியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

 

இதில் அஞ்சலாட்சி கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பமாக இருப்பதை அறிந்த சங்கீதா அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார் சங்கீதா. மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அஞ்சலாட்சியின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்த சங்கரை கைது செய்து நீதிமன்றம் மூலம் சிறைக்கு அனுப்பி உள்ளனர். 

 

அஞ்சலாட்சியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சங்கருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஒரு மனநலம் பாதித்த பெண்ணை மனசாட்சியே இல்லாமல் அவரது மனநிலை சரிஇல்லாததை பயன்படுத்தி அவரது கற்புக்கு காரணமாகி உள்ள சங்கருக்கு சட்டத்தின் மூலம் கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகளை ஏமாற்றிய நெல் வியாபாரி; போலீசார் அதிரடி!

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

villupuram gingee paddy salesman issue

 

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணம் தராமல் ஏமாற்றிய வியாபாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அப்பாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் அளித்த புகாரில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குமார் நெல் வியாபாரத் தொழில் செய்து வருவதாகவும் இதன் மூலம் தனக்கு அறிமுகமானவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் சேவூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு நையனார் என்பவரின் மகன் ஜீனசெல்வம் (வயது 62). இவருக்கு கடந்த 2017 முதல் 2018 ஆண்டு வரை செஞ்சி அப்பாப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து சுமார் 733 நெல் மூட்டைகளை இரண்டு லாரிகளில் ஏற்றி ஜீன செல்வத்திற்கு அனுப்பியதாகவும் அதற்கான தொகை சுமார் 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை ஜீன செல்வம் விவசாயிகளுக்கு தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

 

இதுகுறித்து குமார் 07.04.2023 அன்று அளித்த புகார் மனுவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்படி துணை காவல் கண்காணிப்பாளர் சுவாதி மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்த ஜீன செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

Next Story

செஞ்சி கோட்டையை கைப்பற்றுவாரா அமைச்சர் மஸ்தான்?

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

Senji local body election

 

செஞ்சி பேரூராட்சியின் தலைவராக தற்போதையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கடந்த 1986 முதல் 2016ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அதன் பிறகு 2016ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. மற்றும் 2021ஆம் ஆண்டும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தான் இருக்கிறார். 

 

இந்த நிலையில் 18 வார்டுகள் கொண்ட செஞ்சி பேரூராட்சியில், 11,497 ஆண் வாக்காளர்கள், 12,422 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 23,939 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு அதிமுக சார்பில் 18 வார்டுகளிலும், திமுக சார்பில் 17 வார்டுகளிலும் ஒரு வார்டில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகின்றன. மற்றும் பாஜக, நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுடன் சுயேச்சைகள் உட்பட 77 பேர் போட்டி களத்தில் உள்ளனர். 

 

இதில் அமைச்சர் மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, 6வது வார்டில் போட்டியிடுகிறார். அமைச்சரின் மனைவி சைத்தானி பீ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிறகு போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். நகரில் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய அமைச்சர் மஸ்தான், “தொடர்ந்து எனக்கு வெற்றியை தந்துள்ளீர்கள். அதேபோன்று நடைபெறவுள்ள பேரூராட்சி மன்றத் தேர்தலிலும் அனைத்து வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற வேண்டும். வெற்றிபெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலில் அனைத்து சமூக மக்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால் எமது துணைவியார் போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொண்டார். எனவே உங்களுக்காக தொடர்ந்து பாடுபடும் திமுக வெற்றி பெற வேண்டும்” என்று பேசினார். 

 

எப்படியும் 6-வது முறையாக திமுக பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்று அமைச்சர் மஸ்தான் முழுவீச்சில் தேர்தல் பணி செய்து வருகிறார். இந்த முறை எப்படியும் திமுகவிடம் இருந்து நாம் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். பிரமுகர் தொழிலதிபர் ரங்கநாதன் அவருடன் வழக்கறிஞர் அணியை சேர்ந்த கதிரவன் ஆகியோர் தீவிர தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர். பா.ஜ.க. எப்படியும் சில இடங்களில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் நகர தொழில் அதிபர்களில் ஒருவரான கோபிநாத் கடும் முயற்சி செய்து வருகிறார். 

 

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை கோட்டையில் கொடி ஏற்றிய திமுக, செஞ்சி கோட்டையை பிடித்து கொடி நாட்டுமா அல்லது அதிமுகவிடம் இந்த முறை கோட்டை விடுமா என்பது தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும்.