Skip to main content

முக்கிய சாலைக்கு வந்த ராட்சத முதலை! உயிர்த் தப்பிய பொதுமக்கள்! 

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Giant crocodile on the main road

 

கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை பாலத்தில், நடந்து செல்லும் வழியில் ராட்சத முதலை புகுந்ததால் பரபரப்பானது. அப்பகுதி மக்கள் முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்டுள்ளனர்.

 

கும்பகோணம் - சென்னை சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இருக்கிறது கீழனை என்று அழைக்ககூடிய அனைக்கரை தடுப்பணை. 185 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்கது இந்த அணை. அப்போது ஆங்கிலேயர்கள், நடைபாதை, சீப், சாரட் வண்டிகள் சென்று வர இந்த வழியை அணையில் அமைத்திருந்தனர். காலப்போக்கில் பொது போக்குவரத்து சாலையாகவும், சென்னை கும்பகோணம் மார்க்கத்தின் முக்கிய சாலையாகவும் இருந்துவருகிறது. அதிகனரக வாகனங்களை இரவு நேரங்களில் விடுவது மற்றும் மணல் குவாரிகள் அமைத்தன் விளைவாக இந்த அணை இன்று ஆபத்தில் நிற்கிறது. 

 

இதுஒருபுறம் இருக்க கொள்ளிடம் ஆறு அணைக்கரையை நடு தீவாக ஒதுக்கி இரண்டு ஆறுகளாக பிரிந்து அணைக்கரையை தாண்டி மீண்டும் ஒன்றாக இணைந்து கடலுக்கு செல்லும். தீவுபோல் காட்சியளிக்கும் அணைக்கரை பொதுப்பணித்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

 

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் சுமார் 50க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கிறது. ஆண்டு தோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, கொள்ளிடம் ஆற்றின் வழியாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி பாசன வாய்க்கால்கள், ஆறுகள் வழியாக இளநாங்கூர், சிவாயம், செட்டிமேடு, நாஞ்சலுார், பழைய கொள்ளிடம், வடக்கு ராஜன் பாசன வாய்க்கால், மேலப்பருத்திக்குடி, பெராம்பட்டு, கூத்தன் கோவில், வேளக்குடி, அகரநல்லுார், வல்லம்படுகை, கடவாச்சேரி, ஜெயங்கொண்டபட்டினம், பிச்சாவரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர கிராம நீர்நிலைகளில் சென்று தங்கி விடுகின்றன. அந்த பகுதியில் ஆற்றில் இறங்கும் பொது மக்கள், கால்நடைகளை கடித்து இழுத்துச் சென்றுவிடுகின்றன. கால்நடைகளின் உயிரிழப்பே அதிகமாக இருந்துவருகிறது.


அதே நேரம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் போதும், புதர்களில் இருந்த முதலைகள் வெளியேறி மீண்டும் ஊருக்குள் வந்து விடுகின்றன. அப்படித்தான் 12ம் தேதி இரவு அணைக்கரை பாலத்தில் பாதசாரிகள் நடந்து செல்லும் வழியில் முதலை ஊர்ந்து வந்திருக்கிறது. அதனை கண்டு நடுங்கிய பாதைசாரிகள் அதிகாரிகளுக்கு தகவல் கூறினர். அதிகாரிகளோடு அங்கிருந்த  மக்கள் முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் விட்டனர். 


இரவு நேரம் என்பதால் பாதசாரிகள் அவ்வழியாக யாரும் நடந்து செல்லவில்லை. அதனால் உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

கொள்ளிடம் ஆற்றில் நடந்த சோகம்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
3 people lost their lives in Kollidam river

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரது மகன்கள் சந்தோஷ்(13), சந்திரன்(10). இருவரும் தங்கள் வீட்டிற்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்களின் பிள்ளைகள் சுமார் 10 பேருடன் நேற்று காலை திருமானூர் கொள்ளிடம் ஆற்றிற்குச் சென்று குளித்துள்ளனர். இந்த நிலையில், சிறுவர்களில் சிலர் புதை சூழலில் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்ற மற்ற சிறுவர்கள் முயன்றுள்ளனர். அப்போது 10 சிறுவர்களும் சூழலில் மாட்டிக்கொண்டனர்.

இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், மீனவர்கள், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவர்களில் 7 பேரைக் காப்பாற்றினர். ஆனால் மூன்று பேரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து உடனடியாக அரியலூர் திருவையாறு தீயணைப்புத் துறையினருக்குத்  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியைத் தொடங்கிய தீயணைப்பு வீரர்கள் ஆற்றுப் பகுதியில் பல மணி நேரம் தேடிய பிறகு 3 பேரில் அம்பத்தூரை சேர்ந்த தீபக்(17), தஞ்சாவூரை சேர்ந்த பச்சையப்பன் ஆகிய இருவரின் உடலை மீட்டனர். 

இரவு நேரம் நெருங்கிவிட்டபடியால் இன்று காலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் குழுவினர் இணைந்து மீண்டும் தேடினர். அதில் இன்று காலை மூன்றாவது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்த இளம்பிள்ளைகள் கொள்ளிடம் ஆற்றுச்சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.