Advertisment

"5 பேருக்கு S ஜீன் தொற்று"- சுகாதாரத்துறைச் செயலாளர் பேட்டி!

publive-image

சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "ஒமிக்ரான் தொற்று உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு S ஜீன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12 பேருக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி காணப்பட்டுள்ளது. மொத்தம் 219 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறி உள்ள அனைவரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது. ஒமிக்ரான் தொற்று உள்ளவர்கள் உள்பட 13 பேர் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

ஒமிக்ரான் தொற்று பாதித்த நபருடன் தோஹா விமானத்தில் வந்தவர்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றமடைந்த கரோனா உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

Advertisment

pressmeet health secretary radha krishnan Tamil Nadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe