Skip to main content

சென்னையில் போராட்டம் நடத்திய கள்ளக்குறிச்சி எம்.பி..! (படங்கள்)

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தைக் கண்டித்து, தமிழ்நாடு கைப்பந்து சங்கத் தலைவரும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கெளதமசிகாமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், ‘கடந்த 14.02.2021 அன்று செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் சட்டவிரோதமாக சப்-ஜுனியர் தமிழ்நாடு மாநில அணி தேர்வைத் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அஸோசியேஷன் (TNOA) நடத்தியுள்ளனர்.

 

இந்த நிகழ்வு நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்திற்கு எதிராகவும், தமிழக அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய விளையாட்டு மானியங்களைக் கிடைக்கவிடாமல் தடுக்கின்ற நோக்கோடு அங்கீகார கடிதத்தினைக் கடந்த 1.5 வருடங்களாக வழங்காமல் இழுத்தடித்தும், நமது மாநில வாலிபால் சங்கத்தை அங்கீகரித்து மத்திய அரசுக்கு (ரயில்வே துறைக்கு) கடிதம் வழங்கி இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வீரர்களிடத்தில் தொடர்ந்து குழப்பம் விளைவிக்கும் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அஸோசியேஷனின் (TNOA) நடவடிக்கைகள் தொடரா வண்ணம் இருக்கவும், இத்தகைய நிகழ்வு வரும் காலங்களில் எந்த விளையாட்டு சங்கத்திற்கும் ஏற்படக்கூடாது எனவும்’ வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

மெரினாவில் பீச் வாலிபால் போட்டி; அனுமதி குறித்து தமிழக அரசு அறிவிப்பு

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

marina beach volley ball admission announcement tamilnadu govt

 

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2023’ மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்டது.

 

இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும், பொதுப்பிரிவினருக்கு 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 8 வகையான விளையாட்டுப் போட்டிகளும் என மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மண்டல அளவிலான போட்டிகளும்  நடத்தப்பட்டன.

 

அதனைத் தொடர்ந்து ‘முதலமைச்சர் கோப்பை - 2023’ மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜூலை 01-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 38 மாவட்டங்களைச் சேர்ந்த 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டிகள் ஜூலை மாதம் 25-ந்தேதி வரை நடைபெறுகின்றன.

 

இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் அணிகள் பங்கேற்க உள்ளன. பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் கல்லூரி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் விளையாடுகின்றன. இந்த போட்டிகளைக் காண வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற போராட்டம் (படங்கள்)

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று (06.06.2023) மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஆன்லைன் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும். காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். ஆன்லைன் மணல் விற்பனை பதிவினை முறைப்படுத்த வேண்டும். அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மணல் விற்கப்பட வேண்டும். எஃப்.சீ., டீசல், பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக எல்லை சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.