Skip to main content

கரோனா... சிலின்டர்டெலிவரி மேன்களின் பரிதாப கேள்வி!

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

சுவாசிக்கும் காற்றைத் தவிர மனிதர்களின் அனைத்து இயக்கங்களையும் நிறுத்தி தனிமைப்படுத்த வைக்கிறது கொரோணா வைரஸ் பீதி. ஆளும் அரசுகள் தனது முழு பலத்தையும் பிரயோகித்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் விழிப்புணர்வுகளையும் தடுப்பு நடவடிக்கை, மருத்துவம் என எல்லாவற்றையும் செய்து வருகிறது.


அனைத்து பொது இடங்களிலும், வீடுகளிலும் கிருமி நாசினி ஊற்றி சோப்பு போட்டு கை கழுவுங்கள் என்ற பிரச்சாரத்தின் மூலம் மக்களும் அதன்படி தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். லாரிகள், பேருந்துகள், வாகனங்களுக்கும் கிரிமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்லுகிற எங்களை அரசு நிர்வாகம் கண்டுகொள்ளவில்லையே என வேதனை குரல் எழுப்புகிறார்கள் வீடுகளுக்குச் சென்று கேஸ் சிலின்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள். 

 

gas




இனி அவர்களே கூறுகிறார்கள்... " கேஸ் சிலிண்டர் என்பது மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று இந்த கேஸ் சிலிண்டர்கள் தமிழகத்தில் பல்வேறு தொழிற்பேட்டையில் உள்ள சிலிண்டர் பிளான்ட் களிலிருந்து சிலிண்டர்களில் கேஸ் நிரப்பப்பட்டு ஒவ்வொரு ஊர்களில் உள்ள கேஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

 

பெருநகரங்களில் நூற்றுக்கணக்கான கேஸ் ஏஜென்சிகளும் சிறுநகரங்களில் பத்து இருபது கேஸ் ஏஜென்சி நிறுவனங்களும் இருக்கிறது இந்த கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் தனித்தனியாக குடோன்கள் வைத்துள்ளது. அப்படி பிளான்ட்களிருந்து அனுப்பப்படுகின்ற சிலிண்டர்கள் நேரடியாக தங்களது குடோனில் இறக்கி வைக்கிறார்கள். அதன் பிறகு அந்த சிலிண்டர்களை வீடுகளுக்கு சப்ளை செய்ய அனுப்பப்படுகிறது.

 

ஒரு கேஸ் ஏஜென்சி நிறுவனம் சராசரியாக 2 ஆயிரம் வீடுகள் முதல் 4 ஆயிரம் வீடுகளுக்கு கேஸ் சப்ளை செய்கிறது. இந்த சப்ளை பணியில் ஈடுபடுகிறவர்கள் ஒவ்வொரு நிறுவனத்திலும் 10 முதல் 30 பேர் பணிபுரிகிறார்கள் ஒரு கேஸ் டெலிவரி மேன் தினசரி 30-லிருந்து 60 வீடுகள் வரை கேஸ் சிலிண்டர் கொண்டு போய் அந்த வீடுகளுக்கு கொடுத்து விட்டு வருகிறோம். 


 

 

இந்தக் கேஸ் சிலிண்டர்கள் பிளான்ட்களிலிருந்து அனுப்பப்படும் போதும் சரி, ஏஜென்சி நிறுவனங்கள் அவர்கள் குடோன்களிலிருந்து டெலிவரிக்கு அனுப்பும் போதும் சரி, கிருமிநாசினி தெளிப்பது இல்லை. அந்தந்த ஏஜென்சி நிறுவனம் இதை செய்யவேண்டும் ஆனால் அவர்கள் செய்வதில்லை. அந்த கேஸ் சிலிண்டர்களை நாங்கள்தான் எடுத்துக் கொண்டுவந்து வீடுகளுக்கு சப்ளை செய்கிறோம். 
 

சில வீடுகள் முதல் மாடியிலும் சில வீடுகள் இரண்டு மூன்று நான்கு மாடிகளிலும் இருக்கிறது. படியேறிச் என்று சப்ளை செய்கிறோம் எல்லா இடங்களிலும் வைரஸ் தொற்று இருக்கும் என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது ஆனாலும் வேறு வழியில்லை கேஸ் சிலிண்டர் களில் கிருமிநாசினி அடித்து பாதுகாப்பாக கொடுத்தால் எங்களுக்கும் அது பாதுகாப்பு உணர்வை தரும். 


 

 

அதுமட்டுமல்ல சிலிண்டர் சப்ளை செய்துவிட்டு அந்த காலியான சிலிண்டர்களை எடுத்துக் கொண்டு வருகிறோம் இந்த சிலிண்டர் முறைகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பை பயன்படுத்துவதில் அந்தந்த நிறுவனங்கள் முறையாக கையாண்டு இருந்தால் எங்களுக்கு இந்த பயம் ஏற்படாது கேஸ் சிலிண்டர் விஷயத்தில் அரசு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது நியாயமான கோரிக்கை எனக் கூறுகிறார்கள்.
 

வீட்டின் சமயலறைவரை செல்லும் பொருள் கேஸ் சிலிண்டர், அதே போல் சமயலறைவரை செல்லுபவர் சிலின்டர் டெலிவரி மேன் இதில் வைரஸ் தொற்று வராமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை உடனடியாக எடுக்க வேண்டும். ஒவ்வொரு டெலிவரி மேனும் செலவு செய்து கிரிமி நாசினி மருந்து வாங்கி சிலின்டர்களில் தெளிக்க முடியாது. இதை செய்ய வேண்டியது கேஸ் சிலின்டர் தொழிலில் ஈடுபடும் ஏஜென்சி நிறுவனங்கள் தான்.

 

இப்படியும் ஒரு ஏரியா விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது என்பதை விழிப்போடு வேகமாகக் கவனிக்க வேண்டியது அரசின் பணி.



 

சார்ந்த செய்திகள்

Next Story

வணிக சிலிண்டர் விலை குறைப்பு!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Commercial cylinder price reduction

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 30 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக ரூ. 36 அதிகரித்திருந்த நிலையில் இன்று (01.04.2024) ரூ.30.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் 1,960.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர், இன்று முதல் 1,930 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 818 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

முன்னதாக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் எனத் தெரிவித்த பிரதமர் மோடி சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின் குறிப்பாகப் பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வலுத்த எதிர்ப்புகள்;  ஜொமேட்டோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Action decision taken by zomato company for strong objections

இந்த நவீன உலகில் அனைத்தும் இணையமயம் ஆகிவிட்டது. அந்த வகையில், தங்களுக்கு பிடித்தமான உணவுகளை வீட்டில் இருந்தபடியே செல்போனில் ஆர்டர் செய்து டெலிவரி மூலம் பெறும் முறை அதிகரித்துள்ளது. அதில், இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு டெலிவரி செயலியாக ஜொமேட்டோ இருந்து வருகிறது. இந்த செயலி மூலம், சைவம், அசைவம் உணவுகள் போல் அனைத்தையும் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனத்தில் டெலிவரி செய்பவர்களாக பணிபுரிபவர்கள், சிவப்பு நிற டி- ஷர்ட் அணிந்தபடி வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை டெலிவரி செய்வார்கள். இந்த நிலையில், ஜொமேட்டோ நிறுவனம், சுத்த சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டும் புதிதாக ‘pure veg mode' மற்றும் ‘pure veg fleet' என்ற சேவையை நேற்று (19-03-24) அறிமுகம் செய்தது. இதனை ஜொமேட்டோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபந்தர் கோயல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த சேவை குறித்து தீபந்தர் கோயல் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உலகிலேயே இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய சதவீதத்தை கொண்டுள்ளது. அவர்களிடமிருந்து நாங்கள் பெற்ற மிக முக்கியமான கருத்து என்னவென்றால், அவர்கள் தங்கள் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, அவர்களின் உணவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் அவர்கள் மிகவும் குறிப்பாக இருக்கிறார்கள். அவர்களின் உணவு விருப்பங்களுக்கு தீர்வு காண, 100% சைவ உணவு விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்காக, சொமேட்டோவில் "Pure Veg Fleet" உடன் "Pure Veg Mode"ஐ இன்று அறிமுகப்படுத்துகிறோம்.

Action decision taken by zomato company for strong objections

Pure veg mode மூலம் சுத்தமான சைவ உணவை மட்டுமே வழங்கும் உணவகங்களின் தொகுப்பைக் கொண்டிருக்கும். அதில், எந்த அசைவ உணவுப் பொருட்களையும் வழங்கும் எந்தவொரு உணவகங்களும் இடம்பெறாது. எங்களின் பிரத்யேக  Pure veg fleet ஆப்ஷனில் சுத்தமான வெஜ் உணவகங்களிலிருந்து ஆர்டர்களை மட்டுமே வழங்கும். அதாவது, அசைவ உணவு அல்லது அசைவ உணவகம் வழங்கும் வெஜ் சாப்பாடு, எங்கள் pure veg fleetஇல் பச்சை டெலிவரி பெட்டிக்குள் செல்லாது. இந்த Pure Veg Mode அல்லது Pure Veg Fleet எந்தவொரு மத, அல்லது அரசியல் விருப்பத்திற்கும் சேவையாற்றவோ அல்லது அந்நியப்படுத்தவோ இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்” என்று தெரிவித்திருந்தார். சுத்த சைவ உணவுகளை டெலிவரி செய்யும் பணியாட்கள், பச்சை நிற உடை அணிந்து, பச்சை நிற பையில் வைத்து டெலிவரி செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய சேவைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜொமேட்டோ செயலியை அன் இன்ஸ்டால் செய்து அதன் ஸ்க்ரீன்ஷாட்டை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், சைவ உணவு பிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கான பச்சை உடை பிரிவை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஜொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபந்தர் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சுத்த சைவ உணவு பிரியர்களுக்காக பிரத்யேக பிரதிநிதிகளை நாங்கள் பயன்படுத்தும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பச்சை நிற ஆடை கட்டுப்பாடு திரும்பப் பெறப்படுகிறது. சொமேட்டோவின் அனைத்து டெலிவரி பிரதிநிதிகளும் ஒரே மாதிரியான சிவப்பு நிற உடையே அணிவார்கள். 

Action decision taken by zomato company for strong objections

இதன் மூலம், சைவ ஆர்டர்களுக்கான வெளித்தோற்றத்தை அடையாளம் காண முடியாது. எங்களின் சிவப்பு நிற சீருடை டெலிவரி பிரதிநிதிகள், அசைவ உணவுடன் தவறாக தொடர்பு கொள்ளாமல் இருப்பதையும்,  எந்த விசேஷ நாட்களில் சமூகத்தால் தடுக்கப்படுவதையும் இது உறுதி செய்யும். எங்கள் பிரதிநிதிகளின் உடல் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எங்கள் வாடிக்கையாளர்களில் சிலர் கூட தங்கள் நில உரிமையாளர்களுடன் சிக்கலில் சிக்கக்கூடும் என்பதை நாங்கள் இப்போது உணர்ந்துள்ளோம், அது எங்களால் நடந்தால் அது ஒரு நல்ல விஷயமாக இருக்காது. நேற்றிரவு இதைப் பற்றி பேசிய அனைவருக்கும் நன்றி. இந்த வெளியீட்டின் எதிர்பாராத விளைவுகளை எங்களுக்குப் புரிய வைத்தீர்கள். தேவையற்ற அகங்காரமோ, பெருமிதமோ இல்லாமல் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.