Skip to main content

கூகுல் பிளே ஸ்டோரில் கிடக்கும் குப்பைகள் !

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

உலகில் வாழும் மக்களை இணைக்கும் உறவு தான் "சமூக வலைதளங்கள்" ஆகும்.  இதில் உலகெங்கும் வாழும் நம் தெரிந்த நண்பர்கள் , தெரியாதவர்கள் உட்பட அனைவரிடமும் பேசி வருகிறோம். சமூக வலைதளங்களால் உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் , புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் , விளையாட்டு நிகழ்ச்சிகள் , பாரம்பரிய விழாக்கள் , கல்வி குறித்த செய்திகள் , அரசியல் செய்திகள் உட்பட அனைத்து மொழிகளிலும் காண்பதோடு , செய்திகளை படித்து வருகிறோம். சமூக வலை தளங்களில் முக்கிய பங்கை வகிப்பது "பேஸ்புக்" (Facebook) ஆகும். இந்த வலைதளம் பயன்படுத்தும் நபர்களின் அறிவை வளர்க்க வழிவகை செய்கிறது. "FACEBOOK" சமூக வலை தளத்தை பயன்படுத்தி பெரும்பாலனோர் தனது வளர்ச்சிக்கு தேவையானதை எடுத்துக்கொண்ட போதிலும், சிலர் மட்டும் தவறாக பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர் என்கிற உண்மை எவராலும் மறுக்க முடியாதது. இதில் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். பேஸ்புக்கில் தெரியாத நபர்களின் பழக்கத்தால் பெண்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது என்பதை அனைவராலும் காண முடிகிறது. இந்திய அளவில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது சமூக வலைதளங்களால் அதிக அளவில் நடைப்பெறுகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் போலி கணக்குகள் தொடங்கி மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருவது வருத்ததிற்குரியது.

playstore app

சமூக வலை தள நிறுவனங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

1.பேஸ்புக் , வாட்ஸ் ஆப் , டிவிட்டர் (Facebook, Whatsapp, Twitter) உள்ளிட்ட பல சமூக வலை தள நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து மத்திய அரசு பேச வேண்டும்.
2. இதில் பெண்கள் சமூக வலை தளங்களில் தனக்கென்று தொடங்கப்படும் கணக்குகளில் குறிப்பிடும் விவரங்கள் முழுவதையும் மறைத்து வைக்கும் வகையில் ஒரு புதிய மென்பொருள் உருவாக்க உத்தரவிட வேண்டும். இதனை தொடர்ந்து பெண்கள் போட்டோக்கள் , வீடியோக்கள் பதிவிடுவதை தடுக்கும் வகையில் மென்பொருள் உருவாக்க வேண்டும். 
3. பெண்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவதை சமூக வலை தள நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
4. சமூக வலை தளத்தை பயன்படுத்தி பெண்களுக்கு எதிராக வன்முறை மற்றும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அந்தந்த சமூக வலை தள நிறுவனங்களே பொறுப்பு என்பதன் அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.
5.மேலும் போலி கணக்குகளை சமூக வலை தளங்களில் தொடங்கப்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சமூக வலை தளங்களுக்கென்று புதிய சட்டத்தை மத்திய அரசு வடிவமைக்க வேண்டும்.
6. சமூக வலை தளங்களை கண்காணிக்க சமூக வலை தளங்களுக்கென்று தனி அமைச்சரவை இலாக்காவை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் சமூக வலை தள குற்றங்களை பெருமளவில் குறைக்கலாம். இந்த வழிமுறைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் கையாண்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மோசடி குற்றங்கள் முழுமையாக குறைக்கலாம் .
 

google app

கூகுல் பிளே ஸ்டோரில் கிடக்கும் குப்பைகள் !

சமுதாய இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தேவையற்ற செயலிகள் கூகுல் பிளே ஸ்டோரில் (Google Play Stores) காணப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் "TIKTOK" செயலியால் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அறிந்துள்ளனர். ஆபாச செயலிகளும் இந்த பிளே ஸ்டோரில் இடம் பெற்றுள்ளதால் , இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது? மேலும் இது குறித்து மத்திய அரசு கூகுல் நிறுவன அதிகாரிகளை அழைத்து இது போன்ற தேவையற்ற செயலிகள் உட்பட அனைத்தையும் உடனடியாக நீக்க கூகுல் நிறுவனத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்ய வேண்டும். அப்போது தான் இளைஞர்களின் எதிர்காலம் செம்மையாக இருக்கும். சமுதாய வளர்ச்சி மிக வேகமாக நடைப்போடும்.

இணையதளம் ஒவ்வொருவரின் அறிவியல் வளர்ச்சி மற்றும் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. மேலும் கூகுல் பிளே ஸ்டோரில் ஆபத்தான விளையாட்டு மென்பொருளும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சிறுவர்கள் இந்த செயலிக்கு அடிமையாவதையும் காண முடிகிறது. எனவே கூகுல் நிறுவனத்தை அழைத்து பேசி இது போன்ற தேவையற்ற செயலியை உடனடியாக நீக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். சமூக வலை தள பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இது உலகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே ஐநா மன்றமும் சமூக வலை தளங்கள் தொடர்பான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


பி . சந்தோஷ் , சேலம் 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.