Skip to main content

போலிஸ் துணையோடு திருச்சியில் கஞ்சா- கமிஷனரிடம் புகார் செய்த பொதுமக்கள்!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

போதை தடுப்பு நாளான இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் அலுவலகத்தில் சுமார் 100 மேற்பட்ட பெண்கள் எங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை போலிஸ் துணையோடு நடைபெறுகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது குண்டாஸ் வழக்கு போட வேண்டும் என்கிற கோரிக்கையோடு திரண்டு வந்தனர்.

அவர்களின் என்ன பிரச்சனை என்று கேட்ட போது... 

நாங்கள் திருச்சி மாநகரில் காஜாபேட்டை பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் ,இளைஞர்களும் உள்ளனர். எங்கள் பகுதியில் பலவருடங்களாக அம்மாசி, கொளஞ்சி, அப்புக்குட்டி என்கிற மலர்கொடி அவரது கணவர் ராமச்சந்திரன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.

Ganja in Thiruchy with police help- The public who complained to the commissioner!


இவர்கள் விற்பனை செய்வதால் இந்த பகுதியில் உள்ள இளைஞர்களும், பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து காஜாப்பேட்டைக்கு கஞ்சா வாங்க வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இப்பகுதியில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும், கிண்டல் செய்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இரவு 12 மணி வரையிலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கடந்த வாரம் இரவில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் காலில் இருந்த ஒரு கொலுசைக் கழற்றி எடுக்க முயற்சி செய்தது பெரிய பிரச்சனையானது. இதனைக்கண்ட அப்பகுதி இளைஞர்கள் சத்தம் போட்டது அவன் தப்பி ஓடினான்.

 

Ganja in Thiruchy with police help- The public who complained to the commissioner!


இதேபோன்று இன்னொரு நாள் பெண்களிடம் இருந்து செல்போன் பறித்து சென்ற சம்பவமும் நடந்தது. கஞ்சா வாங்க வருபவர்கள் வீடு தெரியாமல் அக்கம்பக்கத்தினர் வீடுகளை தட்டுவதும், போதையில் ஆபாசமாக பேசுவதும் நாளுக்கு நாள் இவர்கள் அராஜகம் அதிகரித்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள நாங்கள் எல்லொரும் சேர்ந்து கஞ்சா விற்க வேண்டாம் என்று அம்மாசி பாப்புகுட்டி ஆகியோரிடம் முறையிட்டபோது, அவர்கள் நாங்கள் அப்படித்தான் விற்பனை செய்வோம் உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று அடாவடிதனமாகவும், ஆபாசமாக திட்டி எங்களின் மீறி எதுவும் செய்ய முடியாது கொன்று புதைத்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

இவர்களுக்கு எதிராக பேச மக்கள் பயப்படுகிறார்கள். காவல்துறையிடம் பலமுறை இந்த பிரச்சனையை குறித்து புகார் சொல்லியும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்வது போன்ற வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டு வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். நாங்கள் புகார் சொன்னதற்காக பெரிய அளவில் வழக்குகளை எண்ணிக்கைக்காக மட்டுமே கைது செய்கின்றனர். பிறகு மீண்டும் வெளியே வந்து கஞ்சா விற்பனையை தொடங்கிவிடுகின்றனர்.

Ganja in Thiruchy with police help- The public who complained to the commissioner!


போலீசார் தொடர்ந்து இவர்களிடம் லஞ்சம் பெற்று செல்கிறார்கள் என்பதால் தொடர்ந்து விற்பனை செய்கிறார்கள். இந்தநிலையில் 24.6.19 அன்று இரவு நேரத்தில் அந்த பகுதியில் இளைஞர்கள் கஞ்சா விற்பனைக்கு எதிராக பாப்புகுட்டி என்கிற மலர்கொடியிடம் இடம் பேசியுள்ளனார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பாப்புகுட்டி என்கிற மலர்கொடி, அம்மாசி, பாப்புகுட்டி கணவர் ஆகியோர் அந்தப் பகுதியில் இளைஞர்களை கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர். தகாத வார்த்தையில் திட்டி அசிங்கபடுத்திய ஒரு கொலை மிரட்டல் விடுத்தனர். 

இதில் விக்னேஷ் ராஜா என்கிற கார்த்திக் தலையில் காயம் ஏற்பட்டது தையல் போடப்பட்டுள்ளது. மேலும் பிரச்சனையை தடுக்க வந்த போலீசார் என்ன நடந்தது என்று கூட விசாரிக்காமல் அம்மாசி குடும்பத்தை தவிர்த்து அங்கிருந்த அனைவரின் மீதும் பெண்கள் இளைஞர்கள் என்று பாராமல் கண்மூடித்தனமாக லத்தியால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

பாலக்கரை காவல்நிலையத்தை பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மருத்துவமனைக்கு சென்று வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு நடந்த சம்பவங்களை முழுதாக மறைத்து பொய்யாக தனக்கு சாதகமாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Ganja in Thiruchy with police help- The public who complained to the commissioner!


பாலக்கரை காவல் ஆய்வாளர் அரோக்கியதாஸ் மீது பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் நீதிமன்றத்தில் தனி புகார் கொடுத்து அதற்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு பழிதீர்க்கும் நடவடிக்கையாக கஞ்சா விற்கும் கும்பலோடு இணைந்து கொண்டு அவர்களிடம் நடந்த சம்பவத்திற்கு மாறாக பொய் புகார் எழுதி வாங்கி வழக்கறிஞர் முருகானந்தன் மீதும் அந்த பகுதி இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.

கஞ்சா விற்பனை செய்யும் பகுதி என்ற பெயர் எங்களுக்கு வேண்டாம் இனி பொறுக்க முடியாது. பொதுமக்கள் அனைவரும் இணைந்து இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கருதுகிறோம். பலவருடங்களாக நடந்துவரும் கஞ்சா விற்பனையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் கஞ்சா விற்பனை மற்றும் ரவுடி தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் பாலக்கரை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் கொடுக்க வந்துள்ளோம் என்றார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.