Skip to main content

டிவி நிருபர் மீது சூதாட்ட கும்பல் தாக்குதல்!!

Published on 03/11/2018 | Edited on 03/11/2018

பெரம்பலூர் மாவட்ட மாலை முரசு டிவி செய்தியாளராக பணியில் உள்ளவர் சரவணன். சில தினங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த சூதாட்ட கும்பல் தலைவன் சோமசுந்தரம் தலைமையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் மங்களமேடு போலீஸ் எல்லையில் உள்ள எறையூரில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தியுள்ளனர். அப்போது  மங்களமேடுபோலீசார் அந்த கும்பலைகையும் களவுமாக பிடித்து வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று சோமசுந்தரம் தலைமையிலான அந்தகும்பல் பெரம்பலூர் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வந்திருந்தனர்.

 

attack

 

இந்த தகவலை கேள்விப்பட்ட சரவணன் அவரது கேமராமேன் அரவிந்த் ஆகிய இருவரும் சூதாட்ட கும்பலை நீதிமன்றத்தின் வெளியே படம் எடுத்துள்ளனர்.  இதைக்கண்டு கோபமடைந்த அந்த கும்பல் சரவணன் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கி கேமராவை உடைத்து நொறுக்கினர். இதில்  படுகாயமடைந்த சரவணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

 

நீதிமன்ற வளாகத்தில் நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவரமறிந்த பெரம்பலூர் போலீசார் தாக்குதல் நடத்திய சூதாட்ட கும்பலை தேடி வருகிறார்கள். சோமசுந்தம் தலைமையிலான கும்பல் லட்சக்கணக்கணக்கில் பணம், கார்  உட்பட விலை உயர்ந்த வாகனங்களை வைத்து திருச்சி பெரம்பலுர் உட்பட பல இடங்களில் சூதாட்டம் நடத்தி பலர் லட்சக்கணக்கில் பணத்தையும் ஆடம்பர வாகனங்களையும் இழந்துள்ளனர்.

 

இந்த கும்பலின் அட்டகாசத்தை போலீஸ் முடிவுக்கு கொண்டு வருமா? என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அரசியல் வேறுபாடு வன்முறையாக மாறக்கூடாது'- கல்வீச்சுக்கு முதல்வர் கண்டனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'Political difference should not turn into violence'- CM condemns stone pelting

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளால் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'ஆந்திர முதல்வர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும் போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.