Gangs targeting youngsters

கோவையில் தன்பாலின சேர்க்கைக்காக கல்லூரி இளைஞரை அழைத்த கும்பல் அவரைத் தாக்கி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதேபோன்ற சம்பவம் ஆலங்குளத்தில் நிகழ்ந்துள்ளது.

அண்மையில் கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் பிரபலமான மொபைல் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், அதில் அடையாளம் தெரியாத சில நபர்களுடன் பழகி வந்துள்ளார். அந்த மொபைல் செயலியில் இருந்து அடையாளம் தெரியாத நபர், தன் பாலின சேர்க்கைக்கு இளைஞரை அழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற அந்த கல்லூரி இளைஞரை தாக்கிய ஒரு கும்பல், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. கும்பலால் தாக்கப்பட்டு பின்புற தலையில் காயமடைந்த கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும், முன்பின் தெரியாதவர்களை நம்பி இதுபோல் வெளியே செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இதேபோல தன்பாலின ஈர்ப்பாளர்களிடம் ஆசை காட்டி ஆப் மூலம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரில் சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அழகான ஆண்களை அறிமுகப்படுத்துவதாக பிரபல செல்போன் ஆப்மூலம் பழகி பின் நேரில் வரவழைத்து கத்தியைக் காட்டி மிரட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.