Skip to main content

‘தீரன்’ திரைப்பட பாணியில் மீண்டும் ஓர் கொள்ளை கும்பல்..!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

Deeran movie style again a gang of robbers

 

இந்தியாவையே உலுக்கிய பவாரிய கொள்ளை கும்பல் 1990களில் தென்னிந்தியாவில் தனது கொடூர கொலை, கொள்ளைகளை அரங்கேற்றியது. லாரிகளில் தனி ரகசிய அறை அமைத்து, அதில் ஆயுதங்களையும், கொள்ளையர்களையும் மறைத்து அழைத்துவந்து, தனி வீடுகளை நோட்டமிட்டு பின் நள்ளிரவு வேளையில் தனது கும்பலுடன் சென்று, கொடூரமாக தாக்கி கொள்ளையடித்து வந்தது. இவர்களை லாரி கொள்ளையர்கள் என்று அழைத்தனர்.  2000 ஆம் ஆண்டுகளுக்கு மேல் இந்த பவாரியா கும்பலின் கைவரிசை தென்னிந்தியாவில் அதிகமாக இருந்துவந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற மாவட்டங்களில் பல வழக்குகள் பதிவாகின. தென்னிந்திய காவல்துறைக்கே இது மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

 

இவர்களின் கொடூர தாக்குதலில் 18 உயிர் பலிகளும், 64 பேர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். தமிழ்நாடு காவல்துறையின் மிக கடுமையான முயற்சியால் அந்தக் கொடூர கொள்ளை கும்பல் சுட்டுப் பிடிக்கப்பட்டது. இதனால் அடங்கியிருந்த இந்த லாரி கொள்ளையர்கள் மீண்டும் தென்னிந்தியா பக்கம் தங்கள் கைவரிசையை துவங்கியுள்ளனர். கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஆந்திர மாநில எல்லை பகுதியான, கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் கிராமத்தில் இருக்கும் ஏ.டி.எம் மிஷினை நள்ளிரவு நேரத்தில் நுழைந்த கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே அடித்து வீடியோ பதிவு ஆகாதபடி செய்துவிட்டு, காஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம் மிஷினை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

 

Deeran movie style again a gang of robbers

 

அதே நேரத்தில் ஏ.டி.எம் மிஷின் அலாரம் அடித்ததால், ரோந்து போலீசார் அங்கு வருவதைக் கண்டு கொள்ளையர்கள் தாங்கள் கொண்டுவந்த காரில் தப்பிச் சென்றனர். அந்த நேரத்தில் வழியில் வாகன சோதனை சாவடியில் போலீசார் உள்ளதைக் கண்டு அந்தக் காரை நடுரோட்டிலே விட்டுவிட்டு கொள்ளையர்கள்  தப்பியோடினர்கள். போலீசார் அந்த ஆந்திர மாநிலம் பதிவெண் கொண்ட டாடா இண்டிகா காரை கைப்பற்றி விசாரித்ததில், அந்தக் கார் ஆந்திராவில் திருடப்பட்டது தெரியவந்தது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் தனிப்படை அமைத்து விசாரனை நடத்திவந்தார். இந்த நிலையில், அடுத்த செப்டம்பர் 16ஆம் தேதி ராணிபேட்டை மாவட்டத்தில் இதே பாணியில் கொள்ளை சம்பவம் நடந்தது. அதில் ஏ.டி.எம் மிஷினை உடைத்து நான்கு லட்சம் வரை திருடப்பட்டதும், தனிப்படை போலீசாருக்குத் தெரியவந்தது. இதனால் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

 

விசாரணையில், கொள்ளை சம்பவம் நடப்பதற்கு சற்று முன் ஒரே நபர் இரு ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுப்பது தெரியவந்தது. அவர்களது வங்கி கணக்கை வைத்து அவர்களது முழுவிவரமும் சேகரிக்கப்பட்டது. அதில் கொடுத்திருந்த செல்ஃபோன் என்னும் கொள்ளை சம்பவம் நடை பெற்ற தமிழ்நாடு பகுதியில் எங்கெங்கெல்லாம் சென்றது  என்ற டவர் லொகேஷ்னையும் வைத்து விசாரனை நடத்தினர். கொள்ளையனின் செல்ஃபோன் சிக்னலை வைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் கொள்ளையர்கள் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லோடு லாரியில் பயணிக்கின்றனர் என்ற தகவலும், அவர்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட், ஸ்ரீபெரும்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிக்கு லோடு இறக்க சென்ற தகவலும் கிடைத்தது. இது போலீசாருக்கு அதிர்ச்சியை அளித்தது.

 

Deeran movie style again a gang of robbers

 

காரணம் சில ஆண்டுகளுக்கு முன் பவாரியா கொள்ளை கும்பல்  செய்த கொடூரங்கள் போலீசாரின் நினைவுக்கு வந்தன. இதனால் இவர்களைப் பிடிக்காவிட்டால் இந்தக் கொள்ளை கும்பலின் அட்டகாசம் தொடரும் என்பதால் தீவிரமாக காண்காணித்தனர். கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஆரம்பாக்கம் அருகே வருவது தெரியவந்தது. எளாவூர் நவீன சோதனை சாவடியருகே கொள்ளையர்கள் நான்கு பேர் லாரியுடன் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்த போது அரியானா மாநிலம் மேவாத்ஜில்லா மாவட்டதை சேர்ந்த சாஜித், ஹர்சாத், லுக்மன் மற்றும் பதினாரு வயதுடைய சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

 

பவாரியா கொள்ளை கும்பளைப் போலவே லோடு லாரியில் ரகசிய  அறை அமைத்து அதில் குற்ற சம்பவத்திற்க்கு பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர், வெல்டிங் மெஷின் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. கொள்ளையடித்த மீதி பணத்தை அரியானாவில் உள்ள தனது கூட்டாளிகளுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.