Skip to main content

‘தீரன்’ திரைப்பட பாணியில் மீண்டும் ஓர் கொள்ளை கும்பல்..!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

Deeran movie style again a gang of robbers

 

இந்தியாவையே உலுக்கிய பவாரிய கொள்ளை கும்பல் 1990களில் தென்னிந்தியாவில் தனது கொடூர கொலை, கொள்ளைகளை அரங்கேற்றியது. லாரிகளில் தனி ரகசிய அறை அமைத்து, அதில் ஆயுதங்களையும், கொள்ளையர்களையும் மறைத்து அழைத்துவந்து, தனி வீடுகளை நோட்டமிட்டு பின் நள்ளிரவு வேளையில் தனது கும்பலுடன் சென்று, கொடூரமாக தாக்கி கொள்ளையடித்து வந்தது. இவர்களை லாரி கொள்ளையர்கள் என்று அழைத்தனர்.  2000 ஆம் ஆண்டுகளுக்கு மேல் இந்த பவாரியா கும்பலின் கைவரிசை தென்னிந்தியாவில் அதிகமாக இருந்துவந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற மாவட்டங்களில் பல வழக்குகள் பதிவாகின. தென்னிந்திய காவல்துறைக்கே இது மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

 

இவர்களின் கொடூர தாக்குதலில் 18 உயிர் பலிகளும், 64 பேர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். தமிழ்நாடு காவல்துறையின் மிக கடுமையான முயற்சியால் அந்தக் கொடூர கொள்ளை கும்பல் சுட்டுப் பிடிக்கப்பட்டது. இதனால் அடங்கியிருந்த இந்த லாரி கொள்ளையர்கள் மீண்டும் தென்னிந்தியா பக்கம் தங்கள் கைவரிசையை துவங்கியுள்ளனர். கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஆந்திர மாநில எல்லை பகுதியான, கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் கிராமத்தில் இருக்கும் ஏ.டி.எம் மிஷினை நள்ளிரவு நேரத்தில் நுழைந்த கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே அடித்து வீடியோ பதிவு ஆகாதபடி செய்துவிட்டு, காஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம் மிஷினை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

 

Deeran movie style again a gang of robbers

 

அதே நேரத்தில் ஏ.டி.எம் மிஷின் அலாரம் அடித்ததால், ரோந்து போலீசார் அங்கு வருவதைக் கண்டு கொள்ளையர்கள் தாங்கள் கொண்டுவந்த காரில் தப்பிச் சென்றனர். அந்த நேரத்தில் வழியில் வாகன சோதனை சாவடியில் போலீசார் உள்ளதைக் கண்டு அந்தக் காரை நடுரோட்டிலே விட்டுவிட்டு கொள்ளையர்கள்  தப்பியோடினர்கள். போலீசார் அந்த ஆந்திர மாநிலம் பதிவெண் கொண்ட டாடா இண்டிகா காரை கைப்பற்றி விசாரித்ததில், அந்தக் கார் ஆந்திராவில் திருடப்பட்டது தெரியவந்தது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் தனிப்படை அமைத்து விசாரனை நடத்திவந்தார். இந்த நிலையில், அடுத்த செப்டம்பர் 16ஆம் தேதி ராணிபேட்டை மாவட்டத்தில் இதே பாணியில் கொள்ளை சம்பவம் நடந்தது. அதில் ஏ.டி.எம் மிஷினை உடைத்து நான்கு லட்சம் வரை திருடப்பட்டதும், தனிப்படை போலீசாருக்குத் தெரியவந்தது. இதனால் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

 

விசாரணையில், கொள்ளை சம்பவம் நடப்பதற்கு சற்று முன் ஒரே நபர் இரு ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுப்பது தெரியவந்தது. அவர்களது வங்கி கணக்கை வைத்து அவர்களது முழுவிவரமும் சேகரிக்கப்பட்டது. அதில் கொடுத்திருந்த செல்ஃபோன் என்னும் கொள்ளை சம்பவம் நடை பெற்ற தமிழ்நாடு பகுதியில் எங்கெங்கெல்லாம் சென்றது  என்ற டவர் லொகேஷ்னையும் வைத்து விசாரனை நடத்தினர். கொள்ளையனின் செல்ஃபோன் சிக்னலை வைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் கொள்ளையர்கள் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லோடு லாரியில் பயணிக்கின்றனர் என்ற தகவலும், அவர்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட், ஸ்ரீபெரும்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிக்கு லோடு இறக்க சென்ற தகவலும் கிடைத்தது. இது போலீசாருக்கு அதிர்ச்சியை அளித்தது.

 

Deeran movie style again a gang of robbers

 

காரணம் சில ஆண்டுகளுக்கு முன் பவாரியா கொள்ளை கும்பல்  செய்த கொடூரங்கள் போலீசாரின் நினைவுக்கு வந்தன. இதனால் இவர்களைப் பிடிக்காவிட்டால் இந்தக் கொள்ளை கும்பலின் அட்டகாசம் தொடரும் என்பதால் தீவிரமாக காண்காணித்தனர். கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஆரம்பாக்கம் அருகே வருவது தெரியவந்தது. எளாவூர் நவீன சோதனை சாவடியருகே கொள்ளையர்கள் நான்கு பேர் லாரியுடன் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்த போது அரியானா மாநிலம் மேவாத்ஜில்லா மாவட்டதை சேர்ந்த சாஜித், ஹர்சாத், லுக்மன் மற்றும் பதினாரு வயதுடைய சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

 

பவாரியா கொள்ளை கும்பளைப் போலவே லோடு லாரியில் ரகசிய  அறை அமைத்து அதில் குற்ற சம்பவத்திற்க்கு பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர், வெல்டிங் மெஷின் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. கொள்ளையடித்த மீதி பணத்தை அரியானாவில் உள்ள தனது கூட்டாளிகளுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.