Skip to main content

20 வருட பகை; வக்கீலை படுகொலை செய்த கும்பல்

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

a gang incident lawyer in Tuticorin
முத்துக்குமார்

 

தூத்துக்குடியின் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருக்கு முத்துக்குமார், ராம்குமார், சிவக்குமார் என மூன்று மகன்கள். மூத்தவர் முத்துக்குமார் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாகப் பணிபுரிந்து வருவதுடன், ஆட்சியர் அலுவலகம் அருகே நகைக்கு கடன் வழங்கும் பைனான்ஸ் நிறுவனமும் நடத்தி வருபவர்.

 

நேற்று மதியம் 2 மணியளவில் கோர்ட் வேலை முடிந்து தனது நிதி நிறுவனத்திற்கு வந்துள்ளார் முத்துக்குமார். காரிலிருந்து இறங்கிய அவரை பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சுற்றி வளைத்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. அந்தக் கும்பலிடமிருந்து உயிரைக் காப்பாற்ற தப்பியோட முயன்ற முத்துக்குமார் அங்குள்ள கழிவு நீர் ஓடையில் விழுந்தவர் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். கும்பல் தப்பியோடியது. பட்டப் பகலில் நடந்த கொடூர படுகொலை குறித்து தகவலறிந்த எஸ்பி பாலாஜி சரவணன், டிஎஸ்பிக்களான சத்யராஜ், சுரேஷ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் வந்தவர்கள் முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2003ம் ஆண்டு கோரம்பள்ளம் பகுதியில் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டு அங்குள்ள குளப் பகுதியில் புதைக்கப்பட்டார். அதன் பின் தகவல் கசிந்து 2006ம் ஆண்டு அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் முக்கிய குற்றவாளியானார். இந்தக் கொலைக்குப் பழியாக கடந்த 2019 ஆகஸ்ட் 21 அன்று தூத்துக்குடி நீதிமன்றம், அதனையடுத்துள்ள தென் பாகம் காவல் நிலையமருகே ஆத்திப்பழத்தின் தம்பி கோரம்பள்ளம் ராஜேஷ் மற்றும் 18 பேர் சேர்ந்து சிவகுமாரை படுகொலை செய்தனர். இந்த வழக்கில்  தற்போது வரை மூன்று ஆண்டுகளாக ராஜேஷ் கோவை  சிறையில் இருந்து வருகிறார்.

 

ராஜேஷ் ஜாமீன் தாக்கல் செய்யும் போதெல்லாம் அவரை ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வக்கீல் முத்துக்குமார் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வந்துள்ளார். மேலும் கொலை வழக்கில் ராஜேஷை சிக்க வைப்பதற்கு காரணமானவர் முத்துக்குமார் என்பது அத்தரப்பின் ஆத்திரத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் ராஜேஷின் நண்பர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து வக்கீல் முத்துக்குமாரை கொலை செய்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இதனிடையே ராஜேஷின் அண்ணனான ஜெயபிரகாஷ் தலைமறைவாகி விட்டாராம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவர, தலைமறைவானவர்களைப் பிடிக்கத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.

 

2019ன் போது சட்டக்கல்லூரி மாணவரான சிவக்குமார் தூத்துக்குடி கோர்ட் அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். தற்போது அவரது அண்ணன் வக்கீல் முத்துக்குமார் கலெக்டர் அலுவலகம் அருகே வெட்டிக் கொல்லப்பட்ட பழி வாங்கும் சம்பவம் உப்பு நகரைப் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது. பதற்றம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.