Skip to main content

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்; 2 ஆண்டுகளாக  நாசப்படுத்திய அதிர்ச்சி தகவல்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

Gang of 12 ; Shocking information ruined for 2 years!

 

நாமக்கல் அருகே, 14 வயது சிறுமியை 12 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்து நாசப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை குள்ளப்பநகரைச் சேர்ந்த தறித்தொழிலாளி ஒருவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகின்றனர்.

 

தறித்தொழிலாளியுடன் சற்று மனநலம் பாதித்த மனைவி மற்றும் 14 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் வசித்து வருகின்றனர். 6ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட சிறுமி, வட்டமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள எம்ஜிஆர் நகர், சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சில வீடுகளில் வேலை செய்து வருகிறார்.

 

அவ்வப்போது சிறுமியின் மூத்த சகோதரி பெற்றோரைப் பார்க்க வந்து செல்வார். இந்நிலையில், தங்கைக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போவது குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது சிறுமி, தன்னை இரண்டு ஆண்டுகளாக சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகக் கூறியுள்ளார். அவர்களில் மூத்த சகோதரியின் கணவர் சின்ராஜ் என்பவரும் சேர்ந்து தன்னை சீரழித்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு மூத்த சகோதரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

தன் கணவனே தனக்கு துரோகம் செய்துவிட்டதை எண்ணி கலங்கிய மூத்த சகோதரி, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் அமைப்பில் புகார் அளித்தார். அவர்கள் மூலமாக மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதா  பிரியாவிடம் புகார் அளிக்கப்பட்டது.

 

இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

காவல்துறை விசாரணையில், சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் சின்ராஜ் (35) மடடுமின்றி, வட்டமலை அருகே உள்ள எம்ஜிஆர் நகர், சுந்தரம் நகரைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் கண்ணன் (35), பன்னீர் (32), குமார் (29), வடிவேல் (29), மூர்த்தி (55), நாய் சேகர் (25), கோபி (32), அபிமன்னன் (32), சரவணன் (30), சங்கர் (24), முருகேசன் ஆகிய 12 பேர் பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து சிறுமியை நாசப்படுத்திய கும்பலைச் சேர்ந்தவர்களில் முருகேசனை தவிர மற்ற 11 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள முருகேசனை தேடி வருகின்றனர்.

 

வீட்டு வேலைக்கு வந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியும், ஹோட்டல்களில் இருந்து பிரியாணி உள்ளிட்ட வகை வகையான உணவுப் பதார்த்தங்களை வாங்கிக்கொடுத்தும் அவரை சீரழித்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

இவர்களில், சின்ராஜ்தான் முதலில் சிறுமியிடம் அத்துமீறியிருக்கிறார். அவர் அதை தன் நண்பர்களிடம் கூறி பெருமையடித்தபோதுதான், கண்ணன், பன்னீர் உள்ளிட்ட மற்றவர்களும் சிறுமியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாசப்படுத்தி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இன்னும் சிலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது. புகாருக்கு உள்ளானவர்கள் மீது போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

குமாரபாளையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மகளிர் காவல் நிலையம் இல்லாததால், திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

 

கடந்த ஆண்டு இதேபோல், ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையத்தில், வீட்டில் தனியாக இருந்த பள்ளிச் சிறுமிகள் இருவரை அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் முதல் 70 வயது முதியவர் வரை 12 பேர் பாலியல் வன்புணர்வு செய்து நாசப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

வறுமையில் சிக்கித் தவிக்கும் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து ஒரு கும்பல் பாலியல் ரீதியாக நாசமாக்கும் குற்றங்கள் நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக அதிகரித்திருப்பது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.