Skip to main content

“விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்” - இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் பேட்டி!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

Ganesha Chaturthi procession should be allowed

 

தமிழ்நாடு முதல்வர் அனைத்து மத திருவிழாவிற்கும் அனுமதி அளித்திருப்பதுபோல இந்து மத விழாவான விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்கிறார் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர். செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டத்தை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பொதுச் செயலாலாளர், “திருவாருர் மாவட்டத்தில் 500 இடங்களில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலையைப் பிரதிஷ்டை செய்து  ஊர்வலம் நடைபெற உள்ளது. ஜாதி பேதமில்லாத ஒற்றுமையை உருவாக்க வேண்டும். இதற்கு பொது மக்கள் பெரும் ஆதரவு அளிக்க வேண்டும். அதேபோல தமிழ்நாடு முதல்வர் அனைத்து மத திருவிழாவிற்கும் அனுமதி அளிப்பதுபோல, இந்து மத விழாவான விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தவும் அனுமதியளிக்க வேண்டும். பொதுமக்கள் பேராதரவு அளித்து இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டும். அதேபோல இந்துக்களின் உரிமைகளை அரசு ஒடுக்கக் கூடாது” என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.