விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விதவிதமான பொருட்களிலும், பிரமாண்ட வடிவிலும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. கற்றாழை, சங்கு, நவதானியம், பஞ்சமுக ருத்ராட்சம், சந்தனம் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ள பல்வேறு விநாகர் சிலைகள் வியக்கும் வண்ணம் அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக அத்திவரதர் போன்று 9 அடியில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.