இந்தியாவின் முதல் காந்தி சிலைக்கு யாரும் மரியாதை தரவில்லை.

மகாத்மாகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது அவருக்கென இந்தியாவில் சிலையில்லை. இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் ஒரு சிலை நிறுவப்பட்டது.

gandhi statue

நேற்று காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவில் முதல் மகாத்மாகாந்தி சிலைக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று யாரும் மாலை அணிவிக்க வரவில்லை. இது பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.

அதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் காந்தி சிலையை தூய்மைபடுத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Mahatma Gandhi October 2 press Vellore
இதையும் படியுங்கள்
Subscribe