Skip to main content

கரோனா அதிகரித்தால் காந்தி மார்க்கெட் மூடப்படும் - மாநகராட்சி ஆணையர்!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021
Gandhi market to be closed if corona increases - Corporation Commissioner

 

திருச்சி மாவட்டத்தில் கரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோர தாண்டவம் ஆடியது. தினசரி பாதிப்பு 800-ஐ தாண்டிய நிலையில் பொதுமக்கள் அச்சத்துடன் நாளை கழித்து வந்தனர். இதனால் அரசு தரப்பில் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதில் திருச்சி காந்தி மார்க்கெட்டும் மூடப்பட்டது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. அதனால் அதிக அளவில் மக்கள் புழங்கும் இடமாக விளங்குகிறது.

 

ஆகவே 3-வது அலை வியாபாரிகள், பொதுமக்களுக்கு பரவாமல் தடுக்கும் நோக்கத்தில் காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் அனைத்து வியாபாரிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைத்து வியாபாரிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வியாபாரிகள் அனைவருமே கூடுதல் கவனத்துடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் கூறிய தாவது, “தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

ddgfsd

 

இதையடுத்து கடந்த ஆண்டு பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியதால் காந்தி மார்க்கெட்டை மாவட்ட நிர்வாகம் மூடியது. இதனால் வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் மாற்று ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் கரோனாவின் 3-வது அலை மக்கள் மத்தியில் பரவும் என்றும் அதனை முன்னதாகவே நாம் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் மத்தியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் தரப்பில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி அனைத்து தெருக்களிலும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வது, மாஸ்க் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது, காந்தி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து மீண்டும் கரோனா பரவல் திருச்சி மாவட்டத்தில் அதிகமானால் காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் நலன் கருதி மூடப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.