Skip to main content

மஞ்சுவிரட்டுவை குறிவைத்து களமிறங்கிய மூன்று கட்டை சூதாட்ட கும்பல்!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதிகளில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 154 ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான உள்ளுர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் வந்து கலந்துக்கொண்டு மஞ்சுவிரட்டு போட்டியை கண்டுகளித்தனர். மஞ்சுவிரட்டு போட்டி இன்னும் ஒரு மாதம் நீளும்.

 

gambling gang targeting manju virattu


போட்டி நடத்த அனுமதி கேட்டுள்ள கிராமங்களுக்கு ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒருநாள் என ஒதுக்கி மாவட்ட நிர்வாகம் அனுமதி தந்துள்ளது. இப்படி திருவிழா நடைபெறும் இடங்களில் சூதா கும்பல்கள் படையெடுக்கின்றன.

பிதாமகன் படத்தில் சூர்யா ஒரு டப்பாவில் 3 சிறிய கட்டைகளை போட்டு உலுக்கி, என்ன எண் வரும் எனக்கேட்டு பணம் கட்டச்சொல்வார். பணம் கட்டியவர்கள் சொன்ன எண் வந்தால் கட்டிய பணத்தை விட இரண்டு மடங்கு. வரவில்லையென்றால் பணம் அவர்களுக்கு எனக்காட்டுவார்கள்.

 

gambling gang targeting manju virattu


அந்த மூன்று கட்டை சூதாட்டக்காரர்கள் கிராமங்களுக்கு சென்று தரைவிரிப்பை விரித்து வைத்துவிட்டு டப்பாவில் கட்டையை போட்டு குலுக்கி பார்வையாளர்கள் கவனத்தை தங்கள் பக்கம் ஈடுக்கின்றனர். மஞ்சுவிரட்டு பார்க்க வரக்கூடிய இளைஞர்கள், அதன் மீது நாட்டம் செல்லாமல் இந்த சூதாட்டத்தின் மீது கவனத்தை திருப்புகிறார்கள்.

அங்கு வந்து தாங்கள் வைத்துள்ள பணத்தையெல்லாம் சூதாட்டக்காரர்களிடம் தந்துவிட்டு செல்கின்றனர். மஞ்சுவிரட்டுக்கு பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர், இளைஞர்களையும், சூதாட்டக்காரர்களை விரட்டியும் கூட செல்லாமல் தொடர்ந்து மூன்று கட்டை சூதாட்டம் நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.