Skip to main content

கஜா புயல்! மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் உணவு பொட்டலங்கள் வினியோகம்!

Published on 17/11/2018 | Edited on 17/11/2018



 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மஜக பேரிடர் குழு, முழு வீச்சில் களப்பணியாற்றி வருகிறது.
 

முதல் கட்டமாக 300க்கும் மேற்பட்ட மஜக தொண்டர்கள், இப்பணியில் களப்பணியாற்றி வருகிறார்கள். நேற்று முதல் கட்டமாக 3 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. 
 

இன்று 5 ஆயிரம் பேருக்கு மஜக சார்பில் உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகளும், 10 ஆயிரம் மெழுகுவர்த்திகளும் இதுவரை வினியோகிக்கப்பட்டுள்ளது.
 

 மேலும் நாளை முதல் பால் பவுடர்களும் கூடுதலாக வினியோகம் செய்யப்பட உள்ளது என்று மஜகவினர் தெரிவித்துள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்