Skip to main content

மரங்களுக்கு பிறந்தாள் கொண்டாடிய மரங்களின் காதலர்கள்

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ந்தேதி ஏற்பட்ட கஜா புயலின் கோரதாண்டவத்தால் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் வீடுகள், மரங்கள், செடி, கொடி, படகு என்று அத்தனையும் அழித்துவிட்து. அதில் பாதிக்கப்பட்ட அனைவரும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். கோடிக்கணக்கில் அழிந்த மரங்களால் இன்று மழையும் இல்லை. வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. அதனால் தற்போது  திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்கள் பொது இடங்களில் மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றனர்.

 

t


 
இந்த நிலையில் தான் தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் மரங்களுக்கு பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார்கள் மரங்களின் காதலர்கள்.   ஆம்.. இயற்கை ஆர்வலரான ஜீவானந்தம் மரங்கள் மீது ஆர்வம் கொண்டதால் பல்வேறு பகுதியில் இளைஞர்கள், மக்களுடன் இணைந்து ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இப்படித்தான் தம்பிக்கோட்டை முக்கூட்டுசாலை அருகே சாலையோரத்தில் கடந்த ஆண்டு மே. 6 ந் தேதி  இரண்டு செர்ரி மரக்கன்றுகள் நட்டதுடன் அதனை தானே தண்ணீர் ஊற்றி பாதுக்காத்து வந்தார். 

 

t

 

இதில் கடந்த நவம்பர் 16 ந்தேதி ஏற்பட்ட கஜா புயலின் கோரதாண்டவத்தில் அருகில் இருந்த ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தாலும் அந்த இரண்டு செர்ரி மரக்கன்றுகளும் புயலுக்கு தப்பியது. தப்பிய மரங்களைப் பார்த்து ஜீவானந்தமும் கிராம மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். 


புயலுக்கு தப்பிய இந்த இரண்டு மரக்கன்றுகளும் நடப்பட்டு ஒரு வருடம் முடியும் நிலையில் மரக்கன்றகளுக்கு பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்தனர். மேலும் இந்த பிறந்த நாள் என்பது இளைஞர்களை மேலும் மரக்கன்றுகள் நட ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதாலும் மரங்களை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து குழந்தைகளை அழைத்து கேக் வெட்ட செய்து. விருந்தினர்களை அழைத்து வருந்து கொடுத்து கூடவே மரக்கன்றுகளையும் கொடுத்தனர். 


மரங்களின் பிறந்த நிகழ்ச்சிக்கு இயற்கை ஆர்வலர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். கிராம முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.  தொடர்ந்து மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டு வரும் கீழக்காடு கார்த்தி, வடகாடு சுரேஷ், ஜாம்புவானோடை ராஜாஜி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இதில் பல்வேறு அமைப்பினர்கள் ஏராளமான  கிராம மக்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். 

 

t


     இதுகுறித்து இயற்கை ஆர்வலர் ஜீவானந்தம்..  நான் பல ஆண்டுகளாக மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறேன் இப்பகுதியில் கஜா புயலால் முற்றிலும் மரங்கள் அழிந்து விட்டது இதனை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றால் இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுகள் வீதம் வளர்த்தால் தான் பழைய நிலைக்கு இயற்க்கை வளம் கிடைக்கும் அதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் இன்று நான் ஓராண்டாக பராமரித்து வளர்த்து வந்த இந்த மரக்கன்றுகளுக்கு கிராம மக்களுடன் இணைந்து பிறந்தாள் விழா கொண்டாடினோம். இதுபோன்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த பல்வேறு திட்டங்களை திட்டமிட்டு உள்ளேன் என்றார்.


    சபாஷ் மரங்களின் காதலர்களே.. 
மரங்களை வளர்க்க எத்தனை வழிகள் உள்ளதே அத்தனை வழிகளையும் கையாளுகிறார்கள் இளைஞர்கள். விரைவில் கஜாவால் அழிக்கப்பட்ட அத்தனை கோடி மரங்களையும் வளர்த்து எடுப்போம் என்ற சபதம் அந்த இளைஞர்களின் செயலில் தெரிகிறது. 
            

சார்ந்த செய்திகள்

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.