Skip to main content

கஜா புயல் நிவாரணம் கேட்டதால் பொய் வழக்கு, குண்டாஸ்! விஷம் அருந்திவிட்டு பேசிய மாணவன்... பதற வைக்கும் வீடியோ

Published on 25/12/2018 | Edited on 25/12/2018

 

gaja storm student suicide attempt


 

கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த படித்த பட்டதாரி மாணவன் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு யார் காரணம் என்கிற கேள்வி பலரையும் முனுமுனுக்கவைத்துள்ளது. அந்த மாணவன் பேசிய வீடியோவும் வெளியாகி உள்ளது. 
 

நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா, தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர் இனியவன். இவர் வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில்,

 

உலகத்தில் உள்ள எல்லா தமிழ் சொந்தங்களுக்கும் வணக்கம். விவசாயி தற்கொலையை சினிமாவில் பார்த்திருப்பீர்கள். விவசாய குடும்பத்தில் பிறந்த நான் தற்கொலை செய்யப்போவதை பார்க்கலாம். முதலில் என்னோட கஷ்டத்தை கேளுங்கள். அதற்கு பிறகு நீங்கள் இதனை எல்லோருக்கும் தள்ளிவிடுங்கள். 

 

நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு கிராமம். எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். கஜா புயல் பாதிப்பால் எங்க ஊரில் எல்லோரும் கஷ்டப்படுகிறோம். நிவாரணம் வேண்டும் என்று போராட்டம் பண்ணினோம். அப்டி போராட்டம் பண்ணியபோது சிந்தாமணி, சந்தான கிராமத்தில் உள்ளவர்கள் வீடு இல்லாமல் நடுரோட்டில் சமைத்து சாப்பிடும் சூழல் ஏற்பட்டது. 

 

அப்படி சமைத்து சாப்பிடும்போது, எங்களது நிலைமையை சொல்லி நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போது எஸ்.பி. வாகனம் வந்தது. என்ன ரோட்டுல சமைக்கிறீங்கன்னு சொல்லி அடிச்சி விரட்டினார்கள். 

 

முதல் அமைச்சர் வந்து சென்ற பிறகு 10, 20 நாள் கழித்து எல்லோரையும் கைது பண்ணும் சூழல் இருந்தது. வீடு விடாக புகுந்து கைது பண்ணினார்கள். இதுவரை யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. 

 

நான் படித்த பட்டதாரி மாணவன். ஜார்னலிசம் படிச்சிருக்கேன். இருப்பினும் விவசாயம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. யாருடைய உதவியும் இல்லாமல் சொந்த முயற்சியில் விவசாயம் செய்தேன். 

 

கஜா புயலுக்கு போராடியதற்காக எங்களை தேடுகிறார்கள். ஊர் ஊராக அலைகிறோம். தீவிரவாதிகளைப்போல எங்களை தேடுகிறார்கள். என் வாழ்க்கையே வெறுக்கும் அளவுக்கு ஆக்கிவிட்டுவிட்டார்கள். 

 

நான் சாகப்போவதால் நான் கோழை கிடையாது. நான் சாவுவதால் என் ஊருக்கு நல்லது நடக்கட்டும். அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்துவிட்டார்கள். என்னுடைய சாவுக்கு யார் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். 

 

ஊர் ஊரா ஒடுறேன். சாப்பிடவில்லை. எல்லோரும் இப்ப சிரிப்பிங்க. ஒரு நாள் சோத்துக்கு கஷ்டப்படுவீங்க. அப்ப தெரியும் எங்களோடு அருமை. டெல்டா மாவட்டம் முழுவதும் சேதமாயிடுச்சி. இனி அதனை உருவாக்குவது மிகவும் சிரமம். உருவாக்கிற எங்களையும் இப்படி பாடாய் படுத்துறீங்க. 

 

குண்டாஸ் போடும் அளவுக்கு நாங்க என்னங்க தப்பு செய்தோம். எவ்வளவோ பேர் என்னென்னமோ பண்றாங்க. நாங்க போராட்டம் பண்ணி நிவாரணம் கேட்டதற்காக இப்படி பாடாய் படுத்துறீங்க. 

 

எங்க கோரிக்கையை நிறைவேத்துங்க. எங்க அம்மா, எங்க குடும்பத்த பத்திரமா பாத்துக்குங்க. நன்றி வணக்கம். விவசாயம், சோத்துக்கு ஒரு நாள் கையேந்தி நிப்பீங்க. அன்னைக்கு என்னை நினைச்சு பாப்பீங்க. 

 

எல்லாக்கும் வேதனையோடு ஒரு பதிவை போடுகிறேன். நான் பாய்சன் சாப்பிட்டுவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களைவிட்டு பிரிந்துவிடுவேன். அப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி. நாங்க என்னய்யா தப்பு செய்தோம். கஜா புயலில் எவ்வளவு கஷ்டப்பட்டோம். கூரை வீடு, மாடி வீடு வைத்திருந்த எல்லோரும் குளிரில் நின்றோம். 

 

காவல்துறை எங்கள் மீது பொய் வழக்கு போட்டு ரொம்ப கஷ்டப்படுத்துகிறார்கள். கஜா புயல் பற்றி டிவியில் வந்து பேட்டி எடுத்தார்கள். எடப்பாடி ஐய்யா என்று பேசினேன். பேசுவதற்கு கூட உரிமை இல்லையா? இப்படி கஷ்டப்படுத்துகிறார்கள். எங்கள் எல்லோருக்கும் நீதி கிடைக்கணும். எங்கள் குடும்பத்திற்கு நீதி கிடைக்கணும். எங்கள் ஊருக்கு நீதி கிடைக்கணும். எங்கள் ஊர் மக்கள் எல்லோரையும் விடுவிக்க வேண்டும். இதுதான் என்னுடைய சாவின் கோரிக்கை என உருக்கமாக பேசியுள்ளார்.



இனியவனின் தற்கொலை முயற்சி சம்பவம் முகநூலில் பரவியதையடுத்து, இனியவனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருவதோடு, இனியவனின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

கர்ப்பமாக்கிய காதலன்; உயிருக்குப் போராடும் மாணவி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
college girl health was affected due to having pregnant

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி கலா(17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெற்றோரை இழந்த இவர் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு  கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலாவை பார்ப்பதற்காக அவரது அத்தை கல்லூரி விடுதிக்குச் சென்றார். அப்போது அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் கலாவை அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு கலா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவின் அத்தை, கலாவிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்த தனது காதலன் ராம்குமார் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் எனத் தெரிவித்தார். இந்த வாலிபர் காந்திகிராம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், கலாவை அவர் தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவருடன் தனிமையில் இருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கலாவின் கர்ப்பத்தை அவரது அத்தை கலைக்க முடிவு செய்தார். அதன்படி திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை இரு தினங்களுக்கு முன்பு சேர்த்தார். பின்னர் மருத்துவர்கள் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாகியும் உதிரப்போக்கு நிற்கவில்லை.  அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் அரசு மருத்துவமனை வரை சென்றதால் போலீஸ் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நளினி மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான ராம்குமார், கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்த அவரது அத்தை  மற்றும் கர்ப்பத்தை கலைத்த டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.