Skip to main content

நெடுவாசலில் தென்னை, சவுக்கு தோப்புகள் பாதிக்கப்பட்டதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை...

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
farmer suicide

 


நெடுவாசல் கிராமத்தில் தென்னை, சவுக்கு, பலா தோப்பில் மரங்கள் அதிகமாக சாய்ந்து சேதம் ஏற்பட்ட விரக்தியில் இன்று(நவம்பர்27) விவசாயி திருச்செல்வம் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று மெய்யநாதன் எம்.எல்.ஏ கோரிக்கை வைத்துள்ளார்.


கஜா புயல் தாக்கியதில் சோலைவனமாக இருந்த நெடுவாசலும் தப்பவில்லை. போராட்டம் நடந்த நாடியம்மன் கோயில் திடலில் நின்ற அத்தனை ஆலமரங்களும் ஒடிந்து சாய்ந்தது. அதே போல சாலை சாலை எங்கும் நிழல் கொடுத்த மரங்களையும் காணவில்லை. சுற்றியுள்ள விவசாய நிலங்களில் தென்னை, வாழை, மா, பலா, சவுக்கு என்று அத்தனை மரங்களும் ஒடிந்து சாய்ந்தது. இதனால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். 


இந்த நிலையில் அதே பகுதியில் வேலாயுதம் மகன் திருச்செல்வம் ( 45) விவசாயி. அவருக்கு மனைவியும், 3 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். திருச்செல்வத்தின் சுமார் 25 ஏக்கரில் நின்ற தென்னை, பலா, சவுக்கு, பாக்கு மரங்கள் மற்றும் பல மரங்களம் அடியோடு ஒடிந்து நாசமானது.
விஷம் குடித்தார் 


இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை போய் பார்த்துக் கொண்டிருந்தவர் சோகத்தில் காணப்பட்டார். இந்த நிலையில் மனமுடைந்த திருச்செல்வம் ஞாயிற்றுக் கிழமை இரவு பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து பட்டுக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


ரூ. 20 லட்சம் இழப்பீடு :


இந்த தகவல் அறிந்து நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் நெடுவாசலில் திருச்செல்வம் வீட்டில் திரண்டனர். மேலும் ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் அஞ்சலி செலுத்திய பிறகு.. திருச்செல்வத்தின் அனைத்து மரங்களும், பயிர்களும் நாசமான நிலையில் தமிழக அரசு அறிவித்த நிவாரணம் விவசாயிகளின் கடனைக் கட்டக் கூட பத்தாத நிலையில் உள்ளதால் திருச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதனால் தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.


இந்த நிலையில் திருச்செல்வம் உடல் பிரேதப்பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து வடகாடு போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். தோட்டத்தில் உள்ள மரங்கள் சாய்ந்துவிட்டதைப் பார்த்து மனம் உடைந்து இருந்த திருச்செல்வத்தை தேற்றி வீட்டுக்கு அனுப்பினேன். மரங்கள் உடைந்தாலும் மண் இருக்கிறது. அந்த மண்ணில் மரங்களை உருவாக்குவோம் என்று நம்பிக்கையாக பேசி வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று தெரியாமல் போனது என்று அவரது அப்பா வேலாயுதம் கூறினார்.  
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Next Story

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Tuticorin fishermen banned from going to sea
கோப்புப்படம்

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த முன்னறிவிப்பில், ‘தென் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜனவரி 11 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் விடுத்திருந்த எச்சரிக்கையின் படி, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் 300 விசைப் படகுகளும், 2 ஆயிரம் நாட்டுப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.